"தமிழணங்கே" நாகர்கோவிலில் 3200 மாணவிகள் ஒரே நேரத்தில் பாடிய தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும்!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில் ஒரே நேரத்தில் 3,200 மாணவிகள் ஒன்று கூடி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடி சாதனை படைத்துள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் 15 ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.
நாகர்கோவிலில் உள்ள புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் அரவிந்த் இந்த நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

3200 மாணவிகள்
இந்த விழாவில் 3,200 மாணவிகள் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர். அது போல் தேசிய கீதத்தையும் அந்த மாணவிகள் பாடியிருந்தனர். மேலும் ஆட்சியர், ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து தேசியக் கொடியின் மூவர்ண நிறத்தினாலான பலூன்களை பறக்கவிட்டனர்.

மாவட்ட ஆட்சியர்
பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் அரவிந்த் பேசுகையில், விழாவில் 3,200 மாணவிகள் ஒரு சேர தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை பாடிய போது அனைவரிடத்திலும் தேச பக்தியும் தமிழ் பற்றையும் பார்க்க முடிந்தது. இது உண்மையில் பெரிய சாதனையாகும்.

கல்வித் தரம்
மாணவர்கள் எப்போதும் போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. செல்போன்களையும் தவறான வழிகளில் பயன்படுத்தக் கூடாது. உடற்பயிற்சி, யோகா மற்றும் விளையாட்டுகளில் மாணவர்கள் நேரத்தை செலவிட வேண்டும். கல்வி மட்டுமே நமது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பது புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பலூன்கள்
இதைத் தொடர்ந்து நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அமுத பெருவிழா நிகழ்ச்சியிலும் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு மூவர்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டார். அவருடன் சேர்ந்து ஆசிரியர்கள், மாணவர்களும் பலூன்களை பறக்கவிட்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தேசிய தலைவர்களின் வேடம் அணிந்து வந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications