நீட் அச்சம்.. தமிழகத்தில் மூன்றாவது மாணவர் மரணம்.. திருச்செங்கோடு அருகே மோதிலால் தற்கொலை.. ஷாக்கிங்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்றாவதாக ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாளை நாடு முழுக்க நீட் தேர்வு நடக்க உள்ளது. கடும் எதிர்ப்பிற்கு இடையே நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் வரிசையாக அடுத்தது மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல், அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள்.

Neet Fear: One more student commits suicide in Tamilnadu, 3 dies today

மாணவர்களின் தொடர் தற்கொலை தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த நிலையில் சற்று நேரம் முன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சம் காரணமாக தூக்கிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று பேர் இதன் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இன்று காலை மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, நீட் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆதித்யா கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+