நாமக்கல்லில் ஷவர்மா விற்க மீண்டும் அனுமதி.. மூன்றே வாரத்தில் தடையை நீக்கியது மாவட்ட நிர்வாகம்
நாமக்கல்: ஷவர்மா சாப்பிட்டதால் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நாமக்கல்லில் ஷவர்மா விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் உணவகங்களில் ஷவர்மா விற்க அனுமதியளித்து உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் தவக்குமார். தவக்குமார் மகள் கலையரசிக்காக பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் ஷவர்மா பார்சல் வாங்கியுள்ளார். இதே போல நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தனக்கு பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 13 பேருக்கு ட்ரீட் கொடுப்பதற்காக அதே உணவகத்தில் ஷவர்மா வாங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட 13 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதே போல் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட தவக்குமாரின் 14 வயது மகள் கலையரசி மற்றும் அவரது அம்மா சுஜாதா, அத்தை கவிதா, மாமா பூபதி, மாமன் மகள் சுனோஜி ஆகியோருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கலையரசி மட்டும் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சூழலில் கடந்த மாதம் 18ம் தேதி மாணவி கலையரசி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், சவர்மா சாப்பிட்ட 17 பேரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் உணவகத்தை சோதனையிட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் நாமக்கல் மாவட்டங்களில் ஷவர்மா விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நாமக்கல்லில் உணவகங்களில் ஷவர்மா விற்க அனுமதியளித்து உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை கூறுகையில், "நாமக்கல் மாவட்டத்தில் உணவகங்களில் ஷவர்மா விற்க அனுமதியளிக்கப்படுகிறது. கிரில், தந்தூரி போன்ற உணவு வகைகளை விற்பனை செய்யலாம்" என்று கூறியுள்ளது. மேலும், இறைச்சி உணவுகளை இருப்பு வைத்து விற்க கூடாது என்றும், உணவுகளில் ரசாயனம் சேர்க்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications