Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த வாரம் ஊருக்கு வர வேண்டியவர்.. திருடனால் கொல்லப்பட்ட கொடூரம்.. அமெரிக்காவில் இந்தியர் பலி!

அமெரிக்காவில் சுனில் எட்லா என்று 61 வயது இந்திய நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் சுனில் எட்லா என்று 61 வயது இந்திய நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட சுனில் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் நியூ ஜெர்சியில் வசித்து வந்தார்.

இந்த கொலை சம்பவம் கடந்த 15ம் தேதி நடந்துள்ளது. ஆனால் இன்றுதான் இதுகுறித்து இந்திய மீடியாக்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

சுனில் மருத்துவமனை ஒன்றில் இரவு நேர ஆடிட்டராக இருந்துள்ளார். அவர் கடந்த வாரம் பணிக்காக இரவில் செல்லும் நேரத்தில் 16 வயது இளைஞன் ஒருவன் காரை மறித்துள்ளான். துப்பாக்கியை காட்டி அவரை காரைவிட்டு இறங்க சொல்லியுள்ளான்.

கொன்றான்

கொன்றான்

இதையடுத்து காரைவிட்டு இறங்கியவரை துப்பாக்கி முனையில் நிறுத்திவிட்டு, காரை எடுத்து இருக்கிறான். ஆனால் புறப்படும் முன் சுனிலை சுட்டுவிட்டு சென்றுள்ளான். இதில் சுனில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ளான்

கைது செய்யப்பட்டுள்ளான்

இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு மூன்று நாட்களாக திருடன் தேடப்பட்டு வந்தான். இதையடுத்து திருடன் நேற்று இரவு போலீசால் கைது செய்யப்பட்டான். அவன் மீது திருட்டு, கொலை உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது.

இந்தியா வர இருந்தார்

இந்தியா வர இருந்தார்

இவர் அடுத்த வாரம் தன்னுடைய அம்மாவின் பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸை கொண்டாட திட்டமிட்டு இருந்தார். இதற்காக இந்தியா வர டிக்கெட் எடுத்து இருந்தவர், இரண்டு மாத விடுப்பும் எடுத்து இருந்தார். இவர் 1987ல் அமெரிக்காவிற்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+