பைலட்டே இல்லாமல்.. வெற்றிகரமாக ஸ்பேஸுக்கு சென்று திரும்பிய "அமேசான்" ஜெப் பெஸோஸ்.. எப்படி நடந்தது?
நியூயார்ட்: ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் அதன் நிறுவனர் ஜெப் பெஸோஸ் இன்று முதல் ஸ்பேஸ் பயணத்தை மேற்கொண்டார். தனது முதல் ஸ்பேஸ் பயணத்தை 4 பேர் கொண்ட குழுவுடன் அவர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். ஸ்பேஸுக்கு சென்று திரும்பிய ஜெப் "கவ் பாய்" ரக தொப்பி அணிந்து ஸ்டைலாக வந்தது பெரிய வரவேற்பை பெற்றது.
Recommended Video
அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸ் பகுதியில் இருந்து ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் ஏவப்பட்டது. மாலை 6.42 மணிக்கு சரியாக இந்திய நேரப்படி ராக்கெட் ஏவப்பட்டது. முதல் 3 நிமிடத்திற்கு பின் இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மேக் 3 வேகத்தை எட்டி வேகமாக சென்றது.
நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டின் முன் பகுதியில் இருந்த கேப்ஸ்யூல் உள்ளே பெஸோஸ் குழு இருந்தது. பூமியில் இருந்து 90 கிமீ உயரத்தை எட்டிய பின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் உள்ளே இருந்த குழுவினர் புவி ஈர்ப்பு விசை குறைந்ததால் லேசாக மிதக்க தொடங்கினர்.

100 கிமீ வரை
கர்மன் லைன் எனப்படும் 100 கிமீ உயரம் வரை இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் கேப்ஸ்யூலை சுமந்து சென்றது. அதன்பின் கேப்ஸ்யூல் வானத்தை நோக்கி தனியாக பறந்து சென்றது. இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் கேப்ஸ்யூலில் இருந்து பிரிந்து, கேப்ஸ்யூலுக்கு டாட்டா காட்டிவிட்டு பூமியை நோக்கி பாதுகாப்பாக திரும்பி வந்து, மேற்கு டெக்ஸாஸில் ராக்கெட்ட ஏவப்பட்ட இடத்திற்கு அருகில் லேண்ட் ஆனது.

லேண்ட்
ஆம் இது ரீ யூசப்ல் ராக்கெட். வெட்டிக்கல் டேக் ஆப், லெண்டிங் வசதி கொண்டது. இந்த பயணம் முழுக்க ஆட்டோ பைலட் முறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் முழுக்க முழுக்க ஆட்டோ பைலட் வசதியுடன் புரோகிராம் செய்யப்பட்டது. இதை இயக்க ஆட்கள் தேவை இல்லை. கேப்ஸ்யூல் உள்ளே இருந்த ஒரு பெண்ணை ( அவருக்கு வயது 82) தவிர வேறு யாருக்கும் விமானியாக இருந்த அனுபவம் கிடையாது. ஆனால் அவரும் இதற்கு முன் ராக்கெட்டில் சென்றது கிடையாது.

ராக்கெட்
இருப்பினும் எந்த அனுபவமும் இல்லாத குழுவை வைத்துக்கொண்டு ஜெப் பெஸோஸ் விண்ணுக்கு சென்று திரும்பி வந்துள்ளார். ஸ்பேஸ் பயணத்தை சாதாரண மக்களும் மேற்கொள்ளலாம் என்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். ராக்கெட்டை ஓட்டும் பைலட் இல்லாமலே இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் 100 கிமீ தூரம் வரை சென்று கேப்ஸ்யூலை வானத்தில் விட்டுவிட்டு அதன்பின் யு டர்ன் அடித்தது.

சிறப்பு
வானத்தில் 100 கிமீ உயரத்தில் பிரிந்து சென்ற கேப்ஸ்யூல் மேலும் சில கிலோ மீட்டர்கள் சென்று அப்படியே வானத்தில் மிதந்தது. உள்ளே இருந்த குழு புவி ஈர்ப்பு விசை குறைவாக இருந்ததால் மிதந்தனர். மொத்தம் 3 முதல் 4 நிமிடங்கள் இவர்கள் உள்ளே மிதந்தனர்.

திரும்பினார்கள்
அதன்பின் சிறிய ரக பூஸ்டர்கள் மூலம் இந்த கேப்ஸ்யூல் திசை லேசாக மாற்றப்பட்டு மீண்டும் பூமி நோக்கி வந்தது. பூமியை நெருங்கிய பின் 27 கிமீ உயரம் இருக்கும் போது இதன் பாராசூட் இயக்கப்பட்டது. கடைசி நான்கு நிமிடத்தில் மெதுவாக இந்த கேப்ஸ்யூல் திரும்பி வந்தது. பாராசூட் உதவியுடன் மிக பாதுகாப்பாக இந்த கேப்ஸ்யூல் தரையிறங்கியது.

பாராசூட்
உள்ளே இருந்த ஜெப் பெஸோஸ் குழு பாதுகாப்பாக தரையிறங்கினார்கள். ஜெப் பெஸோசுடன் 82 வயது நிரம்பிய முன்னாள் பெண் விமானியான வாலி பங்க் விண்ணுக்கு சென்றார். ஜெப்பின் சகோதரர் மார்க்கும் இதில் விண்ணுக்கு சென்றார். அதேபோல் ஆலிவர் தியாமென் என்று 18 வயது இளம் நபரும் இதில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications