கவனம் மக்களே... ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால்.. அவரிடமிருந்து 6 அடி தூரம் வரை பரவுமாம்!
தொற்று பாதித்தவரிடமிருந்து 6 அடி வரைக்கும் கொரோனா வைரஸ் தாக்குமாம்
நியூயார்க்: ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அவர்களிடமிருந்து 6 அடி வரைக்கும் அந்த நோய்த்தொற்று பாயும் அபாயம் இருக்கிறதாம்.. அமெரிக்க நாட்டு, நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. மிகப்பெரிய வல்லரசு நாடுகளே தொற்றை கண்டு பீதியடைந்து கலங்கி போய் உள்ளன.
இந்த தொற்றுக்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.. அதற்கான ஆராய்ச்சியில் அறிஞர்கள் ஈடுபட்டு வந்தாலும், தொற்று குறித்த புது புது தகவல்கள் தினந்தோறும் வந்தவண்ணம் உள்ளன.

வழிகாட்டுதல்
அந்த வகையில், அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமானது, தற்போது புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது... அதன்படி, காற்றின் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு இந்த வைரஸ் பரவுமாம்.. இதனை சுவாசிக்கும் மற்றவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுமாம்.

பாதிப்பு
இதற்கு முன்புவரை, கொரோனா நோயாளிகளுக்கு பக்கத்தில் இருந்தாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருளை தொட்டாலோ, நமக்கும் தொற்று பாதிக்கும் என்றுதான் சொல்லப்பட்டு வந்தது.. ஆனால், இப்போது அப்படி இல்லை.. தொற்று பாதிப்புக்கு ஆளான நபர்களிடம் இருந்து 6 அடி தூரத்தில் இருந்தால் கூட காற்றின் மூலம் இந்த கொரோனா வைரஸ் பரவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த ஒருவரிடம் இருந்து 6 அடி வரை உள்ள தூரத்தில் அவரது நீர் துளிகளை இன்னொருவர் சுவாசிக்கும்போது உள்இழுக்க வாய்ப்பு உள்ளது...

காற்றோட்டம்
அப்படி இழுக்கும்போது வைரஸ் அவரை பாதிக்கும். இப்படி பரவுவதற்கு காரணம், நம்மை சுற்றி காற்றோட்டம் குறைந்து காணப்படுவது அல்லது அரங்குகளில் அதிக கூட்டத்துடன் நடத்தப்படும் நிகழ்ச்சிகள்தான் என்கிறார்கள்.. இதுபோன்ற இடங்களில் காற்றோட்டம் அவ்வளவாக இல்லாத காரணத்தால் வைரஸ் கிருமிகள் காற்றிலேயே நீண்ட நேரத்துக்கு நிலைத்திருக்குமாம்.. இதன்மூலம் காற்றில் ஒரு மீட்டர் தூரம் வரை கூட பயணிக்கவும் வாய்ப்புள்ளதாம்.

இடைவெளி
அதனால்தான், காற்றோட்டம் இல்லாத வீடுகளில், நெருங்கிய சொந்தங்களாக இருந்தாலும்கூட, மாஸ்க் இல்லாமலும், போதுமான இடைவெளியில்லாமலும் பழக வேண்டாம் என்கிறார்கள்.. இத்தகைய வீடுகளுக்குள் இருப்பதை காட்டிலும், காற்றோட்டம் மிகுந்த வெளியிடங்களில் போதிய சோஷியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடித்தபடி இருக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

மாணவர்கள்
இப்போதைக்கு, அமெரிக்க பள்ளிகளில் மாணவர்களின் பெஞ்சுகளுக்கு நடுவில் 3 அடி இடைவெளி மட்டுமே விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இப்போது, 6 அடி வரை கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்றும், காற்றோட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் ஆபத்து அதிகம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதால், அந்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் உரிய மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை! -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு! -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்!












Click it and Unblock the Notifications