ஒரே ஆண்டில் வேறலெவலில் மாறிய சம்பளம்.. சுந்தர் பிச்சைக்கு 2022ல் கிடைத்தது எவ்வளவு?
நியூயார்க்: ஒரு பக்கம் சிக்கன நடவடிக்கை என ஊழியர்கள் பணி நீக்கம் செய்யும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், மறுபக்கம் சிஇஒ சுந்தர் பிச்சைக்கு பல கோடிகளில் சம்பளம் வழங்கி உள்ளது. சராசரி ஊழியரின் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகமாக ஊதியம் சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, உலகில் அதிக ஊதியம் பெறும் ஐடி நிபுணர்களில் முக்கியமானவர் ஆவார். 50 வயதாகும் சுந்தர் பிச்சைக்கு 2022 ஆம் ஆண்டில், 226 மில்லியன் டாலர் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 1850 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் $218 மில்லியன் பங்கு சார்ந்த பரிசுகள் என்கின்றன ஆங்கில ஊடகங்கள்.

ஒரு பக்கம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிக்கன நடவடிக்கை களை காரணம் காட்டி உலக அளவில் தனது கிளைகளிலிருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இன்னும் ஏராளமானோரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது.
மறுபக்கம் சிஇஒ சுந்தர் பிச்சைக்கு கடந்த 2020 -20222 வரையிலான ஆண்டுகளில் சம்பளம் 2 மில்லியன் டாலராக இருந்தது. அதாவது இந்திய மதிப்பில் 16 கோடிதான் வழங்கப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது 1850 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கி உள்ளார்கள் என்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் சுந்தர் பிச்சை, ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தில் செலவுகளை குறைக்கும் மிகப்பெரிய அளவிலான பணிநீக்கத்தை அறிவித்தார். அதாவது 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போவதாகவும் அத்துடன் உயர் அதிகாரிகள் குறைக்கப்பட்ட போனஸைப் பெறுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்.
12 ஆயிரம் பேர் என்பது கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவன பணியாளர்களில் 6 சதவீதம் ஆகும். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து இந்த மாத தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் லண்டன் அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்,
இந்நிலையில் தான் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சைக்கு 2022-ல் ஒட்டுமொத்த ஊதியமாக 22.6 கோடி டாலர் வழங்கப்பட்டுள்ளது. இது, சராசரி ஊழியரின் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகம் என்று பங்குசந்தை ஆவணங்களில் சுட்டிக்காட்டியுள்ளது.
சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டில் வாரி வழங்கப்பட்டுள்ள பல கோடி டாலர் சம்பளம் அங்கு பணிபுரியும் சாதாரண பணியாளர்களுக்கும், தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய ஊதிய முரண்பாட்டை காட்டுகிறது. ஒரு பக்கம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டும் ஆல்பபெட் நிறுவனம் மறுபக்கம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கடுமையான போட்டியை ஏற்படுத்த விரும்புகிறது. அதற்காக பேர்ட் சாட்பாட்டை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.
பேர்ட் சாட்பாட் நடைமுறைக்கு வரும் போது, இன்னும் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழக்கவே வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே வந்த சாட் ஜிபிடி பலரது வேலைக்கு ஆப்பு வைக்கும் என்று ஐடி பணியாளர்களே கூறியிருக்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications