உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது: ஐநாவில் பிரதமர் மோடி சொன்ன நல்ல செய்தி
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, "உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் ஐநா சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் கொடுக்கலாம் என்றார்.
முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனையை வளர்ச்சிக்கு அடிப்படையாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றடைந்தார். கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்களுடன் சந்திப்பு, துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளி்ல் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்றார். நேற்று குவாட் அமைப்பு மாநாடு மற்றும் அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்நிலையில் வாஷிங்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு இன்று பிரதமர் மோடி வந்தடைந்தார்.

12 வயது
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக கொரோனா தடுப்பூசி குறித்து பேசும் போது, "உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் ஐநா சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12. வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் கொடுக்கலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்திய விஞ்ஞானிகளும் கோவிட் -19 க்கு எதிராக சொட்டுமருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பூசி, எம்ஆர்என்ஏ தடுப்பூசி ஆகியவற்றை உருவாக்கி வருகிறார்கள்.

பொருளாதாரம்
உலகளாவிய பொருளாதாரம் மேலும் பன்முகப்படுத்தப்பட வேண்டும் என்பதை கொரோனா தொற்றுநோய் உலகிற்கு கற்பித்தது. அதனால்தான் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளின் விரிவாக்கம் மிகவும் முக்கியமானது. எங்களது 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டம் இந்த உணர்வால் தான் உருவாக்கப்பட்டது

பகுத்தறிவு
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய மாணவர்கள் உருவாக்கிய 75 செயற்கைக்கோள்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பப் போகிறது. இத்தகைய சூழ்நிலையில், முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனையை வளர்ச்சிக்கு அடிப்படையாக மாற்ற வேண்டும். அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை வலுப்படுத்தும் பொருட்டு, இந்தியா அனுபவம் சார்ந்த கற்றலை ஊக்குவிக்கிறது

பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவை உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் மையமாக மாற்றுவதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளோம். சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. நாம் நமது வருங்கால சந்ததியினருக்குப் பொறுப்பானவர்கள், பொருளாதார வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது." இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications