உங்களால் அணு ஆயுதத்தை எப்போதும் பெற முடியாது.. ஈரானுக்கு டிரம்ப் சவால்.. வலுக்கும் சண்டை!
ஈரான் எப்போதும் அணு ஆயுதத்தை பெறவோ, உருவாக்கவோ முடியாது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.
Recommended Video
நியூயார்க்: ஈரான் எப்போதும் அணு ஆயுதத்தை பெறவோ, உருவாக்கவோ முடியாது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.
ஈரான் அமெரிக்கா இடையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பதற்றம் எப்போது வேண்டுமானாலும் மூன்றாவது உலகப்போரில் முடியும் என்றும் கூறுகிறார்கள். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது.
ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுடன் சண்டை.. முக்கியமான நேரத்தில் டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் பேச்சு.. என்ன பின்னணி?
ஒப்பந்தம்
2015ல் ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்து கொண்டது. முன்னாள் அதிபர் ஒபாமாவின் தீவிர முயற்சியால் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இதை அதிபர் டிரம்ப் வந்த பின், சில மாதங்களில் நீக்கினார். ஈரான் இந்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்று கூறி அவர் ஒப்பந்தத்தை நீக்கினார்.
அடுத்த என்ன
அதன்பின்தான் அவர் ஈரான் மீது பொருளாதாரத்தடைகள் விதித்தார். கடந்த வருடம் மட்டுமே ஈரான் மீது அதிபர் டிரம்ப் மூன்று பொருளாதார தடைகளை விதித்தார். தற்போது ஈரான் மீது தாக்குதலும் நடத்த தொடங்கிவிட்டார்.
தாக்குதல்
இந்த நிலையில் நேற்று ஈரான் அரசு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில். ஈரான் 2015 ஒப்பந்தத்தை மதிக்காது. நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்குவோம். அணு ஆயுத சோதனைகளை நடத்துவோம். அமெரிக்கா எங்களை தடுக்க முடியாது என்று குறிப்பிட்டது.
ஈரான் முடியாது
அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார். அதில், ஈரான் எப்போதும் அணு ஆயுதத்தை பெற முடியாது, என்று கோபமாக குறிப்பிட்டார். ஆனால் ஈரான் தங்கள் அண்டை நாடுகளிடம் இருந்து அணு ஆயுதத்தை பெற முயன்று வருவதும் குறிப்பிடத்தக்கது.