Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மோடி அரசு பல சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும், இந்தியாவில் நம்பமுடியாத உள்கட்டமைப்பு உள்ளது எனவும் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பாராட்டி தள்ளியிருக்கிறார்.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

JP Morgan CEO praises PM Modi for India s incredible infrastructure

இந்நிலையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு குறித்து அமெரிக்க வங்கி ஒன்று பாசிட்டிவாக கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாக ஜே.பி. மோர்கன் செயல்பட்டு வருகிறது. இது வணிக வங்கி, சொத்து மேலாண்மை மற்றும் நிதி பரிவர்த்தனை செயலாக்கம் உள்ளிட்ட பல்வேறு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நியூயார்க்கின் எகனாமிக் கிளப் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் பங்கேற்றிருந்த ஜே.பி.மோர்கனின் சிஇஓ டிமோன், இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி நம்ப முடியாத வேலையை செய்ததாக பாராட்டியுள்ளார்.

"மோடி இந்தியாவில் நம்பமுடியாத வேலையைச் செய்துள்ளார். அவர் 40 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளார். மட்டுமல்லாது இந்தியாவில் மிகச் சிறப்பான உட்கட்டமைப்பும், கல்வி முறையும் இருக்கிறது. இந்த விவகாரங்களில் பிரதமர் மோடி உறுதியாகவும், கடுமையாகவும் இருக்கிறார். அமெரிக்காவுக்கும் இந்த பாணி கொஞ்சம் தேவைப்படுகிறது. இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கிறது. அவர்களின் வரி முறை மிகவும் சிக்கலானது. ஐரோப்பாவை போன்றது.

இதில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த வாய்ப்புகளை பிரதமர் மோடி உடைத்தெறிகிறார். இந்த பாணி அமெரிக்காவுக்கும் கொஞ்சம் தேவைப்படுகிறது. இந்தியாவில் சுமார் 70 கோடி மக்களுக்கு புதியதாக வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அடையாளம் இருக்கிறது. அவர்களின் கைரேகைகள், கருவிழி அடையாளம் இருக்கிறது. இங்கு வலுவான வேலை வாய்ப்பு கட்டமைப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில் சர்வதேச அளவில் மிக முக்கியமான வங்கியாக இருக்கும் ஜே.பி.மோர்கனின் சிஇஒ பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+