பழங்கால இந்திய பொக்கிஷங்களை மீட்டு வந்த பிரதமர்.. 157 தொல்பொருட்களுடன் நாடு திரும்பிய மோடி
நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி இந்தியாவிற்கு சொந்தமான 157 தொல்பொருட்களை தன்னுடன் கொண்டு வந்தார்.
கலை மற்றும் பாரம்பரியத்தில் இந்தியா மிகவும் தொன்மையான நாடு. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான பொருட்கள் இந்தியாவில் உள்ளது. இதில் பல பொருட்கள் சுதந்திரத்திற்கு முன் வெளிநாடுகளுக்கு பிரிட்டிஷார் மூலம் எடுத்து செல்லப்பட்டது. அதேபோல் சுதந்திரத்திற்கு பின் பல நூறு கலை பொருட்கள் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக பல சிலைகள், கலை பொருட்கள் வெளிநாடுகளுக்கு திருடிச் செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இந்த கலைப்பொருட்களை மீட்பதற்கான கடினமான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இன்னும் இந்தியாவிற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான கலைப்பொருட்கள் வெளிநாட்டில் உள்ளது.

பிரதமர் மோடி
இந்த நிலையில்தான் பிரதமர் மோடி 5 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றார். ஐநா மாநாடு, அதிபர் பிடனுடன் சந்திப்பு, துணை அதிபர் கமலா ஹாரிசுடன் சந்திப்பு, குவாட் மாநாடு என்று முக்கிய கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்திய அமெரிக்க உறவு குறித்தும், வரலாற்று ரீதியாக இரண்டு நாட்டு கலாச்சாரம் குறித்தும், இரண்டு நாட்டின் ஜனநாயகம் குறித்தும் இந்த கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டது.

மீட்டார்
இன்று இந்தியா திரும்பிய பிரதமர் மோடி இந்தியாவிற்கு சொந்தமான 157 தொல்பொருட்களை தன்னுடன் கொண்டு வந்தார். சட்ட விரோதமாக கடத்தப்பட்ட, வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட, அமெரிக்காவால் விமான நிலையங்களில், போர்டுகளில் மீட்கப்பட்ட தொல்பொருட்களை மீட்டு பிரதமர் மோடி இந்தியா கொண்டு வருகிறார்.
Recommended Video

என்னென்னெ கலை பொருட்கள்
12ம் நூற்றாண்டை சேர்ந்த வெண்கலத்தால் செய்த நடராஜர் சிலை, மண்ணால் செய்யப்பட்ட 10ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த சிலை, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தை சேர்ந்த 45 கலை பொருட்கள், இந்து மதத்திற்கு சொந்தமான 60, புத்த மதத்தை சேர்ந்த 16 கலை பொருட்கள், ஜெயின் மதத்தை சேர்ந்த 9 கலை பொருட்கள் பிரதமர் மோடி மூலம் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

சிலைகள்
லஷ்மி நாராயண சிலைகள், புத்தா, விஷ்ணு, சிவன் பார்வதி, 24 ஜெயின் தீர்த்த கர்த்தா சிலைகள், வெண்கலத்தில் செய்யப்பட்ட சிலைகள், பெண் உடல் அமைப்புகள், பல்வேறு சிலையின் பாகங்கள், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த 8.5 செமீ நீளமுள்ள ரேவாந்தா சிலை உள்ளிட்ட இந்தியாவிற்கு சொந்தமான 157 தொல்பொருட்களை தன்னுடன் கொண்டு வந்தார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications