உச்சாணிக்கு போன ஆளுநர் ரவி.. ஊட்டி தொட்டாபெட்டா ரோட்டில் திடீர்னு இடறி விழப்போயிட்டாரு.. அந்த "ஷூ"
ஊட்டி: தமிழக ஆளுநர் நீலகிரிக்கு சென்றுள்ள நிலையில், அங்கு அவர் இயற்கை அழகை கண்டு ரசித்துள்ளார். இதுகுறித்த போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு சென்றுள்ளார்.. இதையடுத்து, நேற்றைய தினம் ஊட்டி தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்த ஆளுநருக்கு தோடர் பழங்குடியின மக்கள் தங்களது கலாச்சார உடை அணிவித்து வரவேற்றனர்.

டான்ஸ்: தோடர் இன மக்களின் பாரம்பரிய குல தெய்வக் கோவிலை பார்வையிட்டு, அதன் வழிபாட்டு முறைகளை கேட்டறிந்தார் ஆளுநர். பிறகு, அங்கிருந்த தோடர் பழங்குடியின இளைஞர்கள், இளவட்ட கல்லை ஆளுநர் முன்பு தூக்கி அசத்திவிட்டார்கள்..
பின்னர், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தோடர் பழங்குடியின மக்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.. மேலும், தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை பார்வையிட்ட ஆளுநர், பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.
தொட்டபெட்டா: இன்றைய தினம், தொட்டபெட்டா சிகரத்தை கண்டுகளித்தார் ஆளுநர்.. மனைவி லட்சுமி மற்றும் தன்னுடைய உறவினர்களுடன் நாட்டின் மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா சிகரத்தை கண்டு ரசித்தார். அங்கிருக்கும் தொலைநோக்கி மூலம் சீகூர், குன்னூர், மேட்டுப்பாளையம் பள்ளத்தாக்குகள், ஊட்டி நகரம் என அனைத்தையும் கண்டு ரசித்தனர்.
காட்சி முனை என்று சொல்லக்கூடிய வியூ பாயின்ட் பகுதிக்கு சென்றார் ஆளுநர்.. அப்போது அங்கிருந்த பாறைகள் மீது நடக்கும்போது, திடீரென அவரது ஷூ வழுக்கிவிட்டதால், லேசாக நிலை தடுமாறினார். ஆனாலும் உடனடியாக சுதாரித்து கொண்டார்... பிறகு, குடும்பத்தினரிடம், தன்னுடைய ஷூவை காண்பித்து, "இனிமேல் பாறைகள் மீது ஏறும்போது இப்படியெல்லாம் ஷூ போடக்கூடாது" என்றார்..
வியூ பாயின்ட்: சிறிது நேரம் அங்கு வியூ பாயிண்ட்களை, பைனாகுலர்களில் பார்த்து ரசிதுவிட்டு, தொட்டபெட்டாவில் ஒரு டீயையும் குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் ஆளுநர்.

முன்னதாக, ஆளுநர் தொட்டபெட்டா வரப்போகிறார் என்றதுமே, தொட்டபெட்டா ரோட்டில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் சிறிது நேரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.. அதற்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.. நாளைக்கு தேயிலை பூங்காவுக்கு சென்று பார்வையிட போகிறார் ஆளுநர். டீ எஸ்டேட்டை பார்த்து முடித்ததுமே சென்னைக்கு திரும்புகிறார்.
காட்சி முனை என்று சொல்லக்கூடிய வியூ பாயின்ட் பகுதிக்கு சென்றார் ஆளுநர்.. அப்போது அங்கிருந்த பாறைகள் மீது நடக்கும்போது, திடீரென அவரது ஷூ வழுக்கிவிட்டதால், லேசாக நிலை தடுமாறினார். உடனடியாக சுதாரித்து கொண்ட ஆளுநரை அங்கிருந்த பாதுகாவலர்கள் கெட்டியாக பிடித்து கொண்டனர். பிறகு குடும்பத்தினரிடம், தன்னுடைய ஷூவை காண்பித்து, "இனிமேல் பாறைகள் மீது ஏறும்போது இப்படியெல்லாம் ஷூ போட்டுட்டு வரக்கூடாது" என்றார்..












Click it and Unblock the Notifications