"ஸ்கூபா டைவிங் ரெடி".. நீலகிரியை விடாமல் மிரட்டும் பேய் மழை.. அதிரடியை கையில் எடுத்த சைலேந்திரபாபு
3 நாட்கள் கனமான மழை நீலகிரி மாவட்டத்தில் பெய்து வருகிறது
ஊட்டி: அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மழை விடாமல் பெய்து வருகிறது.. கடந்த 3 நாட்களாகவே இந்த மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது... இதையடுத்து அடுத்தடுத்த நாட்களில் மழைக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அரபிகடலில் டவ்-தே புயல் உருவாகி உள்ளது.. இந்த புயல் எதிரொலியாக, கேரளா உட்பட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பரலாக பெய்கிறது.
இந்த 3 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 2536 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவாலா, சேரம்பாடி பகுதியை சேர்ந்த 60 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..

பாதிப்புகள்
ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை அதிகமாக இருந்தாலும், பாதிப்புகள் பெரிதாக இல்லை. ஊட்டி - கூடலூர் சாலையில் 8வது மைல் அருகே சாலையின் குறுக்கே ராட்சத மரம் நேற்று விழுந்துள்ளது.. ஆனால், நேற்று பொதுலாக்டவுன் என்பதால், போக்குவரத்தில் பாதிப்பு இல்லை.. சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயணைப்பு துறை
இரவு - பகல் என விடாமல் மழை பெய்ததால், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.. இதையடுத்து, பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கூடலூரில் தயார் நிலையில் உள்ளனர்.. இதுபோக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் முகாமிட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு
வழக்கமாக, மழைப்பொழிவு அதிகமாக இருந்தால், கூடலூரில் உள்ள பாண்டியாறு - புன்னம்புழா ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும்.. அந்த வகையில், இப்போதும், தீயணைப்பு துறை ஊட்டியில் தயாராக உள்ளது.. இயக்குநர் சைலேந்திரபாபு முழு முயற்சியில் இதற்கான துரித நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார்.

சென்னை
நீலகிரி மாவட்டத்தில், இனி வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்பதால், சென்னையில் இருந்து ஆழ்கடல் நீந்துதல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சி பெற்ற, "ஸ்கூபா டைவிங்" மீட்புக்குழுவினர் 40 பேர் வந்துள்ளனர். கூடலுார், பந்தலுார் பகுதிகளில், நவீன கருவிகள் மற்றும் சிறப்பு தளவாடங்களுடன் எந்நேரமும் செயல்பட தயார் நிலையில் உள்ளனர்.. ஊட்டியில் மழை விட்டுவிட்டு பெய்து வரும் நிலையில், மின்தடையும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது..!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications