வங்கி கடன்! விவசாயிகளுக்கு வழங்காமல் தெரிந்தவர்களுக்கு வழங்கி மோசடி! ஊட்டியில் வசமாக சிக்கிய அதிகாரி
நீலகிரி: ஊட்டியில் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கியதில் ரூ.8 லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டார். வங்கி கடனை விவசாயிகளுக்கு வழங்காமல் தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வங்கி அதிகாரி ரூ.8 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
சென்னை அயம்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் குமார். வங்கி அதிகாரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் குமார் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள வங்கியில் ஜூனியர் அதிகாரியாக பணி செய்து வந்தார். சொந்த ஊர் சென்னை என்பதால், சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டு இருந்தார். அதன்படி தற்போது அவருக்கு பணி மாறுதலுக்கு ஒப்புதல் கிடைத்தது.

விவசாய கடன் வழங்கியதில் மோசடி
இதையடுத்து வேறு வங்கிக்கு செல்ல தயாராக இருந்தார். இந்த நிலையில் செந்தில் குமார் பணியாற்றிய வங்கியில் தணிக்கை பணி நடந்தது. இந்த தணிக்கை பணியின் போது ரூ.8 லட்சம் செந்தில் குமார் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்தது. அதாவது, மானியத்துடன் கூடிய விவசாயக் கடன் வழங்கும் பிரிவில், மானிய தொகையை பயனாளிகளுக்கு வழங்கியதில் முறைகேடு செய்திருப்பதாக கூறப்பட்டது.
பயனாளிகளான விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தினை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்காமல், செந்தில் குமார் தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி பின்னர் அந்த பணத்தை கையாடல் செய்திருந்தது தெரியவந்தது. இதன்பின்னர் வங்கி ஜூனியர் அதிகாரி செந்தில் குமாரி முழு பணியினையும் தணிக்கை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி நடத்திய விசாரணையில் மொத்தம் ரூ.7,99,146 மோசடி செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.8 லட்சம் மோசடி
இதையடுத்து வங்கி உயர் அதிகாரிகள் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார், இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கியதில் ரூ.8 லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரி செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வங்கி அதிகாரி செந்தில் குமார் இந்த ஒரு மோசடியில் தான் ஈடுபட்டாரா இல்லை இதேபோன்று வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications