இதென்னப்பா புதுசா இருக்கு - பிராமணர்களை இழிவுபடுத்தியதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீது வழக்கு!
பிராமணர்களை இழிவாக பேசிவிட்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் என பீகாரில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
பாட்னா: மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், பிராமணர்களை இழிவுபடுத்தியதாக பீகார் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சீர்திருத்தவாதி ரவிதாசர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், கோவிலில் பூஜை செய்கிற பண்டிட்டுகள்தான் இந்து மத ஜாதிய படிநிலைகளை உருவாக்கினர் என கூறியிருந்தார்.
அதாவது, நமது மனசாட்சி, உணர்வும் ஆகியவை ஒன்றுதான். இவற்றின் மீதான கருத்துகள்தான் மாறுபாடு அடைகின்றன. ஒவ்வொரு பணியுமே சமூக நன்மைக்காக இருக்கும்போது அவை சிறியதா பெரியதா அல்லது வித்தியாசமானதாக எப்படி இருக்கும்? மனிதர்களைப் படைத்தவருக்கு அனைவரும் சமம். ஒரே ஜாதிதான். ஆனால் பல்வேறு ஜாதிகளை பூசாரிகளாகிய பண்டிட்டுகளே உருவாக்கிவிட்டனர் என கூறியிருந்தார் மோகன் பகவத்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு பூரி சங்கராச்சாரியார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பீகார் மாநிலம் முசாபர்பாத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா தாக்கல் செய்த மனுவில், மோகன் பகவத்தின் பேச்சு பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிவிட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மனு மீது பிப்ரவரி 20-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
இதனிடையே பிராமணர்களை இழிவுபடுத்தியதாக சொல்லப்படும் மோகன் பகவத்தின் பேச்சு குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் விளக்கம் தந்துள்ளது. அந்த விளக்கத்தில், மோகன் பகவத் பண்டிட்டுகள் என குறிப்பிட்டிருப்பது எந்த ஒரு பிரிவினையும் குறிப்பிடுவது என்பது அர்த்தம் அல்ல. ஜாதிய படிநிலைகளை ஏற்றுக் கொண்டவர்களைத்தான் அப்படி சொன்னார். ஆனால் சில ஊடகங்களே பிராமணர்கள் குறித்தே மோகன் பகவத் பேசிவிட்டார் என எழுதி இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications