Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதென்னப்பா புதுசா இருக்கு - பிராமணர்களை இழிவுபடுத்தியதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீது வழக்கு!

பிராமணர்களை இழிவாக பேசிவிட்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் என பீகாரில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

பாட்னா: மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், பிராமணர்களை இழிவுபடுத்தியதாக பீகார் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

A Plea in Bihar court against RSS chief Mohan Bhagwat for anti-Brahmin remark

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சீர்திருத்தவாதி ரவிதாசர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், கோவிலில் பூஜை செய்கிற பண்டிட்டுகள்தான் இந்து மத ஜாதிய படிநிலைகளை உருவாக்கினர் என கூறியிருந்தார்.

அதாவது, நமது மனசாட்சி, உணர்வும் ஆகியவை ஒன்றுதான். இவற்றின் மீதான கருத்துகள்தான் மாறுபாடு அடைகின்றன. ஒவ்வொரு பணியுமே சமூக நன்மைக்காக இருக்கும்போது அவை சிறியதா பெரியதா அல்லது வித்தியாசமானதாக எப்படி இருக்கும்? மனிதர்களைப் படைத்தவருக்கு அனைவரும் சமம். ஒரே ஜாதிதான். ஆனால் பல்வேறு ஜாதிகளை பூசாரிகளாகிய பண்டிட்டுகளே உருவாக்கிவிட்டனர் என கூறியிருந்தார் மோகன் பகவத்.

மோகன் பகவத்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு பூரி சங்கராச்சாரியார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பீகார் மாநிலம் முசாபர்பாத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா தாக்கல் செய்த மனுவில், மோகன் பகவத்தின் பேச்சு பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிவிட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மனு மீது பிப்ரவரி 20-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

இதனிடையே பிராமணர்களை இழிவுபடுத்தியதாக சொல்லப்படும் மோகன் பகவத்தின் பேச்சு குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் விளக்கம் தந்துள்ளது. அந்த விளக்கத்தில், மோகன் பகவத் பண்டிட்டுகள் என குறிப்பிட்டிருப்பது எந்த ஒரு பிரிவினையும் குறிப்பிடுவது என்பது அர்த்தம் அல்ல. ஜாதிய படிநிலைகளை ஏற்றுக் கொண்டவர்களைத்தான் அப்படி சொன்னார். ஆனால் சில ஊடகங்களே பிராமணர்கள் குறித்தே மோகன் பகவத் பேசிவிட்டார் என எழுதி இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+