பீகார் தேர்தல்: ஆர்ஜேடி- 145; காங். 70; இடதுசாரிகள் 30 தொகுதிகளில் போட்டி- நாளை அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி-காங். தலைமையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடுகள் குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. ஆர்ஜேடி 145; காங்கிரஸ் 70 மற்றும் இடதுசாரிகள் 30 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

243 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் 28-ந் தேதியும் 2-வது கட்ட வாக்குப் பதிவு அக்டோபர் 3, 3-ம் கட்ட வாக்குப் பதிவு அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். அனைத்து கட்ட வாக்குகளும் அக்டோபர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்பு மனுத் தாக்கல்

வேட்பு மனுத் தாக்கல்

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் நேற்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகாரைப் பொறுத்தவரையில் ஜேடியூ-பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆர்ஜேடி- காங். கூட்டணியும் சமபலத்துடன் தேர்தல் களத்தில் நிற்கின்றன. இம்முறை ஆர்ஜேடி-காங். அணியில் இடதுசாரிகளும் கை கோர்த்துள்ளன.

வேட்பு மனுத் தாக்கல்

வேட்பு மனுத் தாக்கல்

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் நேற்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகாரைப் பொறுத்தவரையில் ஜேடியூ-பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆர்ஜேடி- காங். கூட்டணியும் சமபலத்துடன் தேர்தல் களத்தில் நிற்கின்றன. இம்முறை ஆர்ஜேடி-காங். அணியில் இடதுசாரிகளும் கை கோர்த்துள்ளன.

முதல்வர் வேட்பாளர் நிதிஷ்

முதல்வர் வேட்பாளர் நிதிஷ்

ஜேடியூ-பாஜக கூட்டணியில் முதல்வர் நிதிஷ்குமார்தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆர்ஜேடி-காங். இந்த பஞ்சாயத்துக்குள் சிக்கவில்லை. இந்த அணிகள் இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி ராஷ்டிரிய லோக் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உபேந்திர குஷ்வாஹாவே முதல்வர் வேட்பாளர் என அறிவித்திருக்கிறது.

அடங்கியது பாஸ்வான் கட்சி

அடங்கியது பாஸ்வான் கட்சி

ஜேடியூ-பாஜக அணியில் ராம்விலாஸ் பாஸ்வானில் லோக் ஜனசக்திதான் முரண்டுபிடித்துக் கொண்டிருந்தது. முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையாகவும் லோக்ஜனசக்தி விமர்சித்தது. தற்போது லோக்ஜனசக்தி சமாதானமாகிவிட்டதாகவே தெரிகிறது. இதனால்தான் ஜேடியூ-லோக்ஜனசக்தி-பாஜக இணைந்து பிரச்சனையே இல்லாமல் தேர்தலை சந்திப்போம் என பாஜக தெரிவித்து வருகிறது.

தொகுதி பங்கீடு நாளை வெளியீடு?

தொகுதி பங்கீடு நாளை வெளியீடு?

இதனிடையே தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் இன்னமும் தொகுதிப் பங்கீடுகளை இரு கூட்டணிகளும் அறிவிக்காமல் இருக்கின்றன. ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி நாளை தொகுதிப் பங்கீட்டு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஜேடி 145 தொகுதிகளிலும் காங்கிரஸ் 70 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. இடதுசாரிகள் 30 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+