"மனைவியுடன் காதலன்".. ஊருக்கு நடுவில் 2வது கல்யாணம் செய்து வைத்த கணவன்.. தலையை சுற்ற வைத்த பீகார்
மனைவிக்கு 2வது திருமணம் செய்து வைத்துள்ளார் அவரது கணவன்
பாட்னா: தன் மனைவியை இன்னொருத்தருக்கு கணவனே கல்யாணம் செய்து வைத்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன.

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட சில கிராமங்களில் கிராம பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு, அதிலேயே குற்றங்களுக்கு தண்டனையும் தரப்பட்டு வருகின்றன.. இதில் எல்லை மீறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் நடக்கின்றன... சில நேரம் விநோதங்களும் நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் இது!
பீகார் மாநிலத்தின் தட்ஜேசி என்ற கிராமம் உள்ளது... இங்கு வசித்து வந்த இளைஞர் ஒருவருக்கும் பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.. கல்யாணம் முடிந்ததும், மாப்பிள்ளை வேறு ஊரில் வேலைக்கு போய்விட்டார்.
இதனிடையே மனைவியோ, கரம் பஸ்வன் என்ற இளைஞரிடம் பழகி வந்துள்ளார்.. கல்யாணத்துக்கு முனபே இவரைதான் காதலித்து வந்திருக்கிறார்.. திருமணம் முடிந்தும் உறவு தொடர்ந்துள்ளது.. ஒருநாள் மாப்பிள்ளையின் உறவினர்கள் ஊரில் இருந்து வந்துவிட்டனர்.. அப்போதுதான், அந்த பெண் தன் காதலனுடன் தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.
விஷயம் பஞ்சாயத்துக்கு போனது.. அப்போது அந்த காதலன் சொல்லும்போது, "நானும் அவளும் ரொம்ப வருஷமா காதலிச்சோம்.. ஆனால், அவளை வேற ஒருத்தருக்கு கலயாணம் செய்து வைத்து விட்டனர் என்றார். இதையடுத்து கேட்ட பஞ்சாயத்து தலைவர்கள், பெண்ணின் கணவருக்கு போன் செய்து இது குறித்து தகவல் தந்தனர்.
பின்னர் அவரின் சம்மதத்தோடு பஸ்வனுக்கு பெண்ணை அங்கிருந்த ஒரு கோயிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டு, அங்கிருந்து மனைவியை தன் வீட்டுக்கு பைக்கில் அழைத்து சென்றார். ஆனால் இது எதுவுமே போலீசுக்கு தெரியாதாம்.. யாரும் இதைபற்றி எந்த புகாரும் தரவில்லையாம்.. ஊர்க்காரர்களே பேசி எல்லாவற்றையும் முடித்துவிட்டனர் என்கிறார்கள்.. இருந்தாலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications