"தி கிரேட் சோழாஸ்" பாண்டிச்சேரியில் சோழர்கள்.. ஆர்டிஸ்ட் மணிவண்ணன் புகைப்பட கண்காட்சி
பாண்டிச்சேரி: தி கிரேட் சோழாஸ் புகைப்பட ஓவியக் கண்காட்சி ஆரோவில்லில் உள்ள கலாகேந்திரா பாரத் நிவாஸில் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 'தி கிரேட் சோழாஸ்' கண்காட்சி நடைபெற உள்ளது. சோழர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் கல்லணை, தாராசுரம் ஆலயம், தஞ்சாவூரின் அடையாளமாகத் திகழும் பெரிய கோவிலின் அழகையும், அதன் கோபுரத்தின் கம்பீரத்தையும் கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் கம்பீரத்தையும் ஆர்டிஸ்ட் மணிவண்ணன் காட்சிப்படுத்த உள்ளார்.
சோழர்களின் வரலாறு, கட்டிடக்கலைகள் பற்றி அறிந்திருந்தாலும் அதை நேரில் சென்று பலராலும் பார்க்க முடியாது. கரிகாலன் கட்டிய கல்லனை, தஞ்சை பெரிய கோவில், நார்த்தமலை, கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆலயங்களையும் கட்டிடக்கலை பற்றியும் சிற்பங்களைப் பற்றியும் நாம் புத்தகங்களில் மட்டுமே படித்திருப்போம். தனது புகைப்படங்களால் சோழர்களின் கட்டிடக்கலைகளை அனைவரின் பார்வைக்கும் கொண்டு சேர்க்கிறார் புகைப்படக்கலைஞர் ஆர்.மணிவண்ணன்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆர். மணிவண்ணன் பயண ஒளிப்படக் கலைஞர். பாரம்பரியத்தைத் தேடிச் செல்லும் அவருடைய பயணங்கள், நம்முடைய கலாச்சாரத்தின் பெருமையை அறிந்துகொள்ள உதவுகின்றன. அந்தப் பயணங்களில் அவர் எடுக்கும் ஒளிப்படங்கள், நம்முடைய கலாச்சாரத்தின் பெருமைமிகு கூறுகளை வரலாற்றில் நிலைக்கச் செய்யும் விதமாக இருக்கின்றன.
தன்னுடைய பயண அனுபவங்களை ஒளிப்படக் கண்காட்சிகளின் மூலமாக மக்களிடம் எடுத்துச் செல்வது அவருடைய வழக்கம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தஞ்சாவூரில் 'முகத்தின் குரல் - நாகாஸ்' என்கிற பெயரில் அவர் ஒளிப்படக் கண்காட்சி நடத்தினார். அந்தக் கண்காட்சி நாகாலாந்து பழங்குடி மக்களின் கலாச்சாரம், எளிமையான வாழ்க்கை முறை, உணவு முறை, வண்ணமயமான உடைகள், திருவிழா கொண்டாட்டங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தின.
'தி கிரேட் சோழாஸ்' என்ற பெயரில் ஒரு கண்காட்சியை நாட்டின் தலைநகரான டெல்லியிலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நடத்தியுள்ளார். சோழர்களின் வரலாறு தஞ்சாவூரின் பெருமையை சொல்லும் அந்த கண்காட்சியை பலரும் கண்டு ரசித்தனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு சோழர்கள் வரலாறு பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள கலாகேந்திரா பாரத் நிவாஸில் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 'தி கிரேட் சோழாஸ்' கண்காட்சி நடைபெற உள்ளது. ஜூலை 1ஆம் தேதி கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. சிறப்பு அழைப்பாளர்களாக கலைமாமணி சிற்பி டாக்டர் பி.வி. பிரபாகரன், பாரதியார் பல்கலைக்கூடம் பாண்டிச்சேரி. டாக்டர் பி. ராமநாதன் பிடிஎஸ் ராமநாதன் டென்ட்டல் கிளினீக் மன்னார்குடி, தஞ்சாவூர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் மணிவண்ணனின் ஒளிப்படங்கள் தஞ்சாவூரின் வரலாற்றையும், அதன் பெருமைமிகு கலாச்சாரத்தையும் இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் விதமாக உள்ளன. தஞ்சாவூரின் அடையாளமாகத் திகழும் பெரிய கோவிலின் அழகையும், அதன் கோபுரத்தின் கம்பீரத்தையும் மணிவண்ணன் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. சொல்லப்போனால், நேரில் சென்று பார்ப்பதற்கு நிகரான அனுபவத்தை அளிக்கின்றன.
பாண்டிச்சேரியில் இருந்தபடியே தஞ்சாவூரையும், சோழர்களின் கட்டிடக்கலை பற்றியும், கரிகாலன் கட்டிய கல்லணையையும் கண்டு ரசிக்க விரும்பினால் சோழர்களின் வரலாறை தெரிந்து கொள்ள நினைப்பவர்கள்ஆரோவில்லில் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்குச் சென்று வாருங்கள். சோழர்களின் காலத்துக்குச் சென்று திரும்பிய அனுபவத்தை உணரலாம். மேலும் தொடர்புக்கு 9043562566,
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications