மாயமான மீன் வியாபாரி.. டிரோன் வைத்து வலை வீசி தேடும் போலீஸ்.. புதுவையில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான மீன் வியாபாரியை சதுப்புநிலக் காடுகளில் பறக்கும் கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மீன் வியாபாரி செய்துவருகிறார். இவர் தினமும் தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து கோரிமேடு பகுதியில் வியாபாரம் செய்து வந்தார்.
அதே போன்று நேற்று காலையில் தேங்காய் திட்டு துறைமுகத்திற்கு மீன் வாங்க சென்றவர் மாயமானார். மேலும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் அவரது உடைகள் மீன் பிடித்துறைமுகம் செல்லும் சாலை அருகே கிடந்தது.

மோப்ப நாய்களுடன் தேடுதல்
இதுகுறித்து தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கணேசனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இருப்பினும் எங்கு தேடியும் கணேசன் குறித்த தகவல் கிடைக்கவில்லை.

கொலையா
கணேசன் மீன் வாங்க வரும் போது ரூபாய் 50 ஆயிரம் வரை பணம் கொண்டு வருவது வழக்கம். ஆகவே பணத்திற்காக யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

டிஐஜி உத்தரவு
இந்த நிலையில் மக்கள் அதிக நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இது குறித்து தீவிர விசாரணைக்கு காவல்துறை டிஐஜி உத்தரவிட்டார்.

டிரோன் மூலம் தேடுதல்
இதனையடுத்து கணேசன் மாயமான இடத்தை சுற்றி 2 கி.மீ சுற்றுலவு தூரம் வரையில் சதுப்பு நில காடுகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் அப்பகுதியில் பறக்கும் கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மீன் வியாபாரி மாயமாகியுள்ள சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications