புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு ஆளுநர் கிரண்பேடிதான் காரணம்- மோடிக்கு நாராயணசாமி பதில்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போடுவதே துணை நிலைஆளுநர் கிரண்பேடிதான் என கூறியுள்ளார்.
இந்தியாவில் ஜனநாயகமே இல்லை என ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி இருந்தார். இதற்கு பதில் தந்த பிரதமர் மோடி, ஜனநாயகம் குறித்து எங்களுக்கு பாடம் நடத்துகிறவர்கள்தான் புதுச்சேரியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர் என கூறி இருந்தார்.

புதுவை என்.ஆர்.காங். அரசு
இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அளித்துள்ள விளக்கம்: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று 2012-ல்தான் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. அப்போது புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. என்.ஆர். காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.

கிரண்பேடி மீது புகார்
2014-ம் ஆண்டுக்குப் பின்னரும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த என்.ஆர். காங். அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 2016-ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நாங்கள் முயற்சித்தோம். இதற்காக தேர்தல் அதிகாரியை நியமித்தோம். ஆனால் இது தொடர்பான கோப்புகளை ஆளுநர் கிரண்பேடி திருப்பி அனுப்பிவிட்டார்.

கிரண்பேடி தலையீடு
ஆளுநர் கிரண்பேடி நியமித்த தேர்தல் அதிகாரியோ வனத்துறையை சேர்ந்தவர். இதனால் அதை நாங்கள் ஏற்கவும் முடியவில்லை. புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஒவ்வொரு நிமிடமும் ஆளுநர் கிரண்பேடி தலையிட்டுக் கொண்டே இருக்கிறார். இது ஜனநாயகத்தை சீர்குலைப்பது ஆகாதா? இந்த ஜனநாயக சீர்குலைவு பற்றி பிரதமர் மோடி பேசாமல் இருப்பது ஏன்? இவ்வாறு நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநருக்கு அதிகாரம் உண்டு
அதேநேரத்தில் ஆளுநர் கிரண்பேடியோ, தேர்தல் அதிகாரி நியமனங்கள் என்பது ஆளுநரின் அதிகாரத்துக்குட்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுகள் தெளிவானதாகவே இருக்கின்றன. ஆனால் புதுச்சேரி அரசாங்கம்தான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications