12 நிமிட பேச்சில்.. "பாஜக" இந்த வார்த்தையே விஜய் வாயில் இருந்து வரவில்லை.. தவெக கணக்கு என்ன?
புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் 12 நிமிட பேச்சில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் முதல்வர் ரங்கசாமி மீது எந்தவொரு விமர்சனமும் முன் வைக்காதது பேசுபொருளாகி இருக்கிறது. திமுக மற்றும் மத்திய அரசு குறித்து கடுமையாக விமர்சித்த விஜய், ஆட்சியில் இருக்கும் ரங்கசாமியை பாராட்டி இருக்கிறார். அதேபோல் தமிழக அரசை திமுக அரசு என்று குறிப்பிட்ட விஜய், பாஜக என்ற வார்த்தையை ஒருமுறை கூட சொல்லவில்லை.
கரூர் சம்பவம் நிகழ்ந்து 72 நாட்களுக்கு பின் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே போலீசார் அனுமதி வழங்கி இருந்த நிலையில், கூடுதலாகவே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் 11 மணிக்கு தவெக பொதுக்கூட்டம் தொடங்குவதாக இருந்த நிலையில், விஜய் 10.45 மணிக்கெல்லாம் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்.

இதன்பின் விஜய் பேசுகையில், தமிழ்நாடும், புதுச்சேரியும் வேறு வேறு கிடையாது. 1977ல் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால், 1974லேயே புதுச்சேரியில் ஆட்சி அமைத்துவிட்டார். தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் மத்திய அரசு ஒதுக்கக் கூடாது. அதேபோல் வேறு கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து பாரபட்சம் பார்க்காமல் புதுச்சேரி அரசு நடந்துள்ளது.
புதுச்சேரி அரசுக்கும், சிஎம் சார்-க்கும் மனப்பூர்வமான நன்றி.. இதனை பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். அதேபோல் புதுச்சேரியில் ஆளும் கட்சி கூட்டணியில் மத்திய அரசு இருந்தாலும், அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. மாநில அந்தஸ்து கோரிக்கை என்ன ஆனது?
வேலைவாய்ப்புக்காக மத்திய அரசு ஒரு ஐடி கம்பெனியை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமே இல்லை. புதுச்சேரியின் எந்த பகுதியிலும் முன்னேற்றம் இல்லை.. புதுச்சேரி மக்கள் திமுகவை மட்டும் நம்பிவிடாதீர்கள்.. அவர்கள் உங்களை நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள் என்று தெரிவித்தார். விஜய்யின் 12 நிமிட பேச்சில் என்ஆர் காங்கிரஸ் கட்சியை பாராட்டி இருந்தார்.
அதேபோல் மத்திய அரசு மற்றும் திமுகவை கடுமையாக சாடினார். ஆனால் புதுச்சேரி பிரச்சனைகளை பேசும் போது மத்திய அரசு என்று குறிப்பிட்ட விஜய், ஒருமுறை கூட பாஜகவின் பெயரை சொல்லவில்லை. மாறாக தமிழக அரசு என்று சொல்வதற்கு பதிலாக திமுக அரசு என்று விஜய் விமர்சித்தார். இதனால் என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விஜய் முயற்சித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து.. விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாராம்! -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி












Click it and Unblock the Notifications