காலராவால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு.. இருவர் பலி.. காரைக்காலில் அவசர நிலை பிரகடனம்!
புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில் காலராவால் பாதிக்கப்பட்ட இருவர் இணை நோய்களால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காலரா பாதிப்பு எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏராளமான மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்து வந்தன. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீ ராமுலு காரைக்காலில் மருத்துவ குழுவினருடன் ஆய்வு செய்தார்.

காலரா பாதிப்பு
இதுகுறித்து அவர் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்தில் சமீபகாலமாக கடுமையான வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. மேலும் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.

அதிக மக்கள் பாதிப்பு
இதனிடையே நாளுக்கு நாள் மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. இதுவரை காலரா நோயால் 1,584 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலரா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்புக்குழு அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இருவர் பலி
இந்த நிலையில் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை தரப்பில், இருவருக்கும் இணை நோய்கள் இருக்கிறது எனவும், ஒருவருக்கு புற்று நோயும், மற்றொரு நபருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும், அதே நேரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு அறிவுறுத்தல்
பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கவும். சாப்பிடும் முன், கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் சுகாதாராத்துறையால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பான கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்தவும், திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும், வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வாந்தி எடுத்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications