புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புயல்ல தென்னை எல்லாம் போச்சே.. மனமுடைந்த புதுக்கோட்டை விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

கஜா புயல் சேதம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்துகொண்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அழிந்து போன தென்னை... சோகத்தில் விவசாயி தற்கொலை

    புதுக்கோட்டை: கஜா புயல் சேதம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்துகொண்டார்.

    கஜா புயல் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தமிழகம் முழுக்க 37 பேர் பலியாகி உள்ளனர். நேற்று திருவாரூரில் பெண் ஒருவர் முகாமில் சுகாதாரமில்லாத உணவு சாப்பிட்டு பலியானார்.

     Gaja Loss: A farmer in Neduvasal, Pudukottai commits suicide

    கடந்த வாரம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிகாட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ் கஜா புயலில் தென்னை மரங்கள் நாசமானதால் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த தென்னை விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்து கொண்டார்.

    கஜா புயல் சேதத்தால் மனமுடைந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்து கொண்டார். அவரது 2 ஏக்கர் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்ததால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை வருட உழைப்பு வீணானதில் அவர் மனமுடைந்து போய் உள்ளார்.

    இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத அவர் நேற்று மாலை பூச்சி மருந்து சாப்பிட்டார். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விவசாயி திருச்செல்வம் நேற்று இரவு பலினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Gaja Loss: A farmer in Neduvasal, Pudukottai commits suicide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X