நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த மனைவி.. கழுத்தை நெரித்து கொலை செய்த டிரைவர்.. பரபரப்பு வாக்குமூலம்!
ராமநாதபுரம்: நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த மனைவியை டிரைவர் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அவர் உடனடியாக போலீஸ் நிலையம் சென்று ஆஜரானார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. டிரைவர்.
இவரது மனைவி ராதிகா. இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

அடிக்கடி தகராறு
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராதிகா கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஏனாதி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ராதிகா குழந்தையை அழைத்து வந்துள்ளார். இதற்கிடையே ராதிகாவுக்கும், தூரி கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கள்ளக்காதல்
முதலில் நட்பாக தொடங்கிய உறவு பின்னர் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக மாடசாமி மனைவியை பலமுறை கண்டித்துள்ளளார். ஆனாலும் ராதிகா-செல்வக்குமார் இடையேயான உறவு தொடர்ந்து வந்தது. இதனால் மனைவி மீது உச்சக்கட்ட கோபத்தில் இருந்துள்ளார் மாடசாமி.

கொலை செய்தார்
இந்த நிலையில் ஆத்திரமடைந்த மாடசாமி மனைவி ராதிகாவை நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தபோது, கழுத்தை நெரித்து, தலையணையை வைத்து அழுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து மாடசாமி முதுகுளத்தூர் காவல் நிலையம் சென்று மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம்
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ராதிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி தகாத உறவில் ஈடுபட்டு வந்ததும், செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருப்பததாகவும், இதை பலமுறை கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் கொலை செய்து விட்டதாகவும் மாடசாமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications