நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த மனைவி.. கழுத்தை நெரித்து கொலை செய்த டிரைவர்.. பரபரப்பு வாக்குமூலம்!
ராமநாதபுரம்: நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த மனைவியை டிரைவர் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அவர் உடனடியாக போலீஸ் நிலையம் சென்று ஆஜரானார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. டிரைவர்.
இவரது மனைவி ராதிகா. இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

அடிக்கடி தகராறு
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராதிகா கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஏனாதி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ராதிகா குழந்தையை அழைத்து வந்துள்ளார். இதற்கிடையே ராதிகாவுக்கும், தூரி கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கள்ளக்காதல்
முதலில் நட்பாக தொடங்கிய உறவு பின்னர் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக மாடசாமி மனைவியை பலமுறை கண்டித்துள்ளளார். ஆனாலும் ராதிகா-செல்வக்குமார் இடையேயான உறவு தொடர்ந்து வந்தது. இதனால் மனைவி மீது உச்சக்கட்ட கோபத்தில் இருந்துள்ளார் மாடசாமி.

கொலை செய்தார்
இந்த நிலையில் ஆத்திரமடைந்த மாடசாமி மனைவி ராதிகாவை நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தபோது, கழுத்தை நெரித்து, தலையணையை வைத்து அழுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து மாடசாமி முதுகுளத்தூர் காவல் நிலையம் சென்று மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம்
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ராதிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி தகாத உறவில் ஈடுபட்டு வந்ததும், செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருப்பததாகவும், இதை பலமுறை கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் கொலை செய்து விட்டதாகவும் மாடசாமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
-
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications