மெக்காவுக்குள் நுழைந்த வேற்று மத பத்திரிகையாளர். . இஸ்லாமியர்கள் கொந்தளிப்பு. .
ரியாத்: முஸ்லிம்களின் புனித இடமாக கருதப்படும் மெக்காவுக்குள் வேற்று மதத்தை சேர்ந்த இஸ்ரேல் பத்திரிகையாளர் சென்றது இஸ்லாமியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நபரை மெக்காவுக்குள் அனுமதித்த சவுதி அரேபிய நபரை போலீசார் கைது செய்தனர்.
இஸ்லாமியர்களின் புனித இடமாக கருதப்படும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மசூதிக்கு ஆண்டுதோறும் உலகில் பல நாடுகளில் இருந்து சுமார் 25 லட்சம் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொற்று பரவல் குறைந்துள்ளதால் நடப்பு ஆண்டில் வெளிநாட்டு பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெக்காவிற்கு இஸ்லாமிய நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.

10 நிமிட வீடியோ
இந்த நிலையில், மெக்கா நகருக்குள் இஸ்ரேலை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் சென்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள சேனல் 13 என்ற தொலைக்காட்சியில் பணியாற்றும் கில் டாம்ரி என்ற செய்தியாளர் 10 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் ஹஜ் புனித பயணத்தின் இறுதி நிகழ்வாக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் இடமான மவுண்ட் அராபத் என்ற இடத்திற்கு சென்ற காட்சிகளையும் பதிவு செய்தார்.

இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பு
தனது செயல் சட்டத்திற்கு புறம்பானது என்று நன்கு அறிந்திருந்த கில் டாம்ரி, தனது செயலை நியாயப்படுத்தும் வகையில், நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு மிகவும் முக்கியமான இடமாக உள்ளதை வெளிக்காட்டவே இப்படி செய்ததாக விளக்கம் அளிக்கிறார். கில் டாம்ரியின் இந்த செயல், அங்குள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன. கில் டாம்ரி தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்தார். இதனால், எதிர்ப்புகள் குறைந்தன.

அமெரிக்க குடிமகன்
இதற்கு மத்தியில், இஸ்லாமியர் அல்லாத நபரை மெக்காவிற்குள் செல்ல உதவியதற்காக சவுதி அரேபியாவை சேர்ந்த நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். மெக்காவிற்குள் சென்ற இஸ்ரேல் பத்திரிகையாளரின் பெயரை சவுதி அரேபியா நாட்டு போலீசார் வெளியிடவில்லை. அமெரிக்க குடிமகன் என்று மட்டுமே தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு எதிராக சட்ட விதிகளின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சவுதி அரேபிய போலீசார் உறுதிபட தெரிவித்தனர்.

இஸ்ரேலுடன் நல்லுறவு இல்லை
இஸ்ரேல் நாட்டுடன் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் வர்த்தக உறவை ஏற்படுத்திக்கொண்டாலும், இஸ்ரேலை அங்கீகரிக்க சவுதி அரேபியா மறுத்துவிட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் இஸ்ரேல், சவுதி அரேபியா என அடுத்தடுத்து சென்றார். இது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சியில் பணியாற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் சர்ச்சையில் சிக்கியிருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications