தென்படாத பிறை.. சவூதி அரேபியாவில் வரும் 23ம் தேதி ரமலான் நோன்பு துவக்கம்.. தமிழ்நாட்டில் எப்போது?
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ரியாத்: சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை பிறை தென்படாத நிலையில் அங்கு வரும் 23ம் தேதி ரமலான் நோன்பு துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் எப்போது ரமலான் நோன்பு எப்போது தொடங்க வாய்ப்பு என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள்.

நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம்.
இந்த நோன்பு காலத்தில் உணவு உண்ணாமல், நீர் பருகாமல் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். அதிகாலை முதல் அந்தி மாலை வரை நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் அதன்பிறகு நோன்பு கஞ்சி சாப்பிட்டு நோன்பை முடிப்பார்கள். மேலும் இப்தார் விருந்தும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறை பார்த்தே நோன்பு கடைப்பிடித்தல் என்பது துவங்கப்பட உள்ளது.
அதன்படி சவூதி அரேபியாவில் இன்று பிறை தென்படவில்லை. இதனால் வியாழக்கிழமை முதல் ரமலான் மாதம் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சவூதி அரேபியாவுக்கு மறுநாள் ரமலான் நோன்பு தொடங்கும். எனவே வரும் வெள்ளிக்கிழமை இங்கு ரமலான் தொடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் பிறை பார்த்தே இறுதி முடிவு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.












Click it and Unblock the Notifications