சவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்!
சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அமெரிக்கா அங்கு படைகளை குவித்து வருகிறது.
ரியாத்: சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அமெரிக்கா அங்கு படைகளை குவித்து வருகிறது.
ஏமன் மற்றும் சவுதி இடையிலான பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளது. ஏமனில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஹவுதி போராளி குழுக்கள் சவுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது.
சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி மையங்களான அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய 2 கிணறுகளில் ஹவுதி படை டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் சவுதியின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

என்ன தாக்குதல்
ஆள் இல்லாத அதி நவீன டிரோன் இந்த தாக்குதல் நடக்கிறது. இந்த தொழில்நுட்பம் உலகில் சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது. ஈரானிடமும் இந்த தொழில்நுட்பம் உள்ளது. ஈரான்தான் ஹவுதி நடத்தும் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. ஹவுதி போராளி குழுக்களுக்கு ஈரான் உதவுவதாக புகார் உள்ளது.

என்னஉதவி
இந்த நிலையில் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவுதியில் இருக்கும் முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்து இருந்தது. சவுதி அரசும் இதற்காக அமெரிக்காவிடம் உதவி கேட்டது. தற்போது அதை ஏற்று சவுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது.

சவுதி
சவுதியில் முதற்கட்ட போன மாதமே அமெரிக்கா 20 ஆயிரம் படை வீரர்களை அனுப்பியது. தற்போது கூடுதலாக மேலும் படை வீரர்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது. இந்த வாரம் இன்னும் அதிகமாக படை வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்கா கூறி உள்ளது. இவர்களிடம் அதி நவீன் டிரோன் மற்றும் ரேடார் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

போர்
ஹவுதி போராளி குழுக்கள் நடத்தும் டிரோன் தாக்குதல்களை சமாளிப்பதே இவர்களின் டாஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். எந்த விதமான தாக்குதலையும் நாங்கள் எதிர்கொள்ள தயார்.

பயம்
அமெரிக்காவின் செயலை நாங்கள் இனியும் பொறுக்க மாட்டோம். எப்போது வேண்டுமானாலும் நாங்கள் திருப்பு தாக்குவோம், என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் உண்டாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications