Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதிக்கு பெரிய சிலை தேவையா? கருப்பு பெயிண்ட் பூசி கைதான 77 வயது டாக்டர்.. பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி உயர முழு உருவ வெண்கலச்சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 77 வயது மருத்துவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நாட்டில் மக்கள் பசி பட்டினியால் பாதிக்கப்படுகின்றனர். ஏழைகள் மதுபோதைக்கு அடிமையாகி வருகின்றனர். இப்படியான சூழலில் கருணாநிதிக்கு இவ்வளவு பெரிய சிலை தேவையா? என்று கருப்பு பெயிண்ட் ஊற்றியதாக தெரிவித்து இருப்பது திடுக்கிட வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வரும், திமுகவின் மாஜி தலைவருமான கருணாநிதியின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

karunanidhi salem

இந்த சிலையை கடந்த 2023ம் ஆண்டில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கருணாநிதி சிலை அமைந்துள்ள இடத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில் தான் நேற்று அதிகாலையில் கருணாநிதியின் சிலை அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது.

அதாவது அந்த சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டு இருந்தது. அதிகாலையில் சிலை வழியாக சென்றவர்கள் கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பது பற்றி திமுக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். திமுகவினர் குவிந்தனர். பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கருணாநிதி சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிவயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் கூறினர்.

சம்பவ இடத்துக்கு போலீசாரும் விரைந்தனர். உதவி போலீஸ் கமிஷனர் அஸ்வினி, அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் குழுவினரும் ஆய்வு செய்தனர். அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது காரில் முதியவர் ஒருவர் பெயிண்டு டப்பாவுடன் அந்த வழியாக செல்வது பதிவாகி இருந்தது. இதனால் அவர் தான் கருணாநிதி சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றி இருக்கலாம் என்று போலீசார் கருதினர். தனிப்படை போலீசார் தீவிரமாக அவரை தேடினர். இந்நிலையில் தான் முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கைதான முதியவரின் பெயர் விஸ்வநாதான். இவருக்கு 77 வயது ஆகிறது. இவர் டாக்டர் ஆவார். காது, மூக்கு, தொண்டை சிகிச்சை டாக்டரான இவர் சேலம் 5 ரோடுபகுதியில் வசித்து வருகிறார். இவர் மட்டும் தனியாக காரில் கருப்பு பெயிண்ட்டை எடுத்து சென்று கருணாநிதியின் சிலையின் மீது ஊற்றிவிட்டு திரும்பி வந்துள்ளார்.

நாட்டில் பசி பட்டினி, ஏழைகள் மதுபோதைக்கு அடிமையாகி வருவதாகவும், இந்த வேளையில் இந்த இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இவ்வளவு பெரிய சிலை தேவையா? என்று நினைத்தேன். கருணாநிதி சிலையை பார்க்கும் போதெல்லாம் மனஅழுத்தம் ஏற்பட்டது. இதனால் 5 லிட்டர் கருப்பு பெயிண்ட் வாங்கி வந்து ஊற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். இது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+