நாள்தோறும் பங்கீடு அடிப்படையில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர்.. டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்
மேட்டூர்: முதல்வரின் பேச்சால் நடப்பாண்டில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 52,21 அடியாக உள்ளது.
இயற்கை ஒத்துழைத்தால் மட்டுமே குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியிருப்பது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 1 மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் பெய்தால் கூட, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவது சந்தேகமே. கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகே காவிரியில் தண்ணீர் திறப்பதை அம்மாநில அரசு வழக்கமாக கொண்டிருப்பதே இதற்கு காரணம்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காவிரியில் இருந்து தற்போது 25 முதல் 50 கனஅடி வரை மட்டுமே நீர் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். மேட்டூர் அணையில் 90 முதல் 100 அடி இருந்தால் மட்டுமே டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க முடியும்.
ஆகவே போதிய தண்ணீர் இல்லாததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் காவிரியில் உரிய தண்ணீரை திறக்க கர்நாடகாவை வலியுறுத்த விவசாயிகள் கோரியுள்ளனர்
ஆண்டுதோறும் இது போன்றதொரு நிலை உருவாவதை தடுக்க கர்நாகாவிடமிருந்து நாள்தோறும் பங்கீடு அடிப்படையில் தண்ணீரை பெற வேண்டும் என்றும் காவிரி டெல்டா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications