மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு... ஓடி வந்தாள் காவிரி... அணைக்கு... இன்று வயது 87!!
மேட்டூர்: தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனத்துக்கு உயிர் கொடுத்து வருவதுடன், 12 மாவட்டங்களுக்கு குடிநீர் அளித்து வரும் மேட்டூர் அணை கட்டப்பட்டு இன்றுடன் 87 ஆண்டுகள் முடிவடைகிறது. இந்த அணையை கட்டி முடிப்பதற்கு 9 ஆண்டுகள் தேவைப்பட்டது. அணையை காலனல் டபிள்யூ.எம்.எல்லிஸ் என்ற ஆங்கிலேயே பொறியாளர் கட்டினார். இந்த அணை ஸ்டேன்லி அணை என்றும் அழைக்கப்படுகிறது.
Recommended Video
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றும் தென்னகத்தின் அரிசி கிண்ணம் என்றும் அழைக்கப்படும் காவிரி டெல்டா பகுதிகளை இன்று உயிர்ப்புடன் வைத்து இருப்பது மேட்டூர் அணைதான். இந்த அணையின் உயரம் 214 அடி, அகலம் 171 அடி. 1925-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. அணையை கட்டுவதற்கு ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. 1934ஆம் ஆண்டில் ஆகஸ்ட், 21 ஆம் தேதி அணை கட்டி முடிக்கப்பட்டது. அப்போதே அதில் நீரும் நிறுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மேட்டூர் அணையின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அணை அப்போது வெறும் ரூ. 4.80 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் இதுவும் ஒன்று.
கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி, அதன் நீர் திறந்துவிடும்போது, மேட்டூர் அணையை வந்து சேருகிறது. இந்த அணையை தமிழக பொதுப்பணித்துறை கண்காணித்து வருகிறது.
இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் மூலம் தமிழகத்தில் 16.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன பெறுகின்றன. மேட்டூர் அணை கடந்த 1990களில் இருந்து பிரபலமானது. இதற்குக் காரணம் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையிலான நீர் பங்கீடு பிரச்சனை. இதுதொடர்பான பிரச்சனை இருமாநிலங்கள் இடையே பெரிய அளவில் சிக்கல்களை ஏற்படுத்தி, வன்முறைகளையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும், மேட்டூர் அணைக்கு காவிரியில் இருந்து நீர் வரத்து இருக்கும் இடங்களில் கர்நாடகா மாநிலம் ஹேரங்கி, கபினி, கிருஷணராஜசாகர், ஹேமாவதி ஆகிய அணைகளைக் கட்டி நீரை தேக்கியது. இதனால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து நீர் வருவது தடைபட்டது. இதுதான பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டது.
தற்போது தமிழகத்துக்கு கர்நாடகா மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் 177.25 டி.எம்.சி. அளவுக்கு நீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிககளில் நல்ல மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவில் பாதிப்பில்லை.
இந்த ஆண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன கழை பெய்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 17ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 99.03 அடியாக இருந்தது. ஓரிரு நாளில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் அணையின் நீர் மட்டம் 19ஆம் தேதியன்று 97.94 அடியாக குறைந்தது.
டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 16,500 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்காக விநாடிக்கு 500 கன அடி வீதமும் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று அணைக்கு வரும் நீரின் அளவு 27 ஆயிரத்து 845 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 99.81 அடியாக உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications