இந்து மதம் பற்றி அவதூறு? இளைஞரை கைது செய்த போலீஸ்.. கலெக்டர் அலுவலகம் முற்றுகை.. சேலத்தில் பரபரப்பு!
சேலம் : இந்து மதம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்ய முயன்றதை கண்டித்து இஸ்லாமியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரை கண்டித்தும், அந்த இளைஞரை விடுவிக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முஸ்லீம் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
போராடிய இளைஞர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றதால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முஸ்லீம் இளைஞர்
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்கர் என்ற இளைஞர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்து மதம் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டுள்ளதாக கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் சிலர் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரைத் தேடி வந்தனர்.

கைது
போலீசார் தேடிய அந்த இளைஞர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நபர்களை கண்டித்து முஸ்லீம் யூத் லீக் அமைப்பு சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். இதனைக் கண்டித்து முஸ்லீம் யூத் லீக் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
மேலும் போலீஸ் வாகனத்தின் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராடிய இளைஞர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இரவிலும் போராட்டம்
பின்னர் அந்த வாலிபரை போலீசார் விடுவித்தனர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிவடைந்ததும் மீண்டும் அந்த வாலிபரை விசாரணைக்காக போலீசார் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து போலீசாரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முஸ்லீம் அமைப்பினர் தொடர்ந்து இரவிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications