சேலத்தில் கறிக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. ஆட்டுக் கறி கிலோவுக்கு ரூ 100 உயர்வு
சேலம்: சேலத்தில் கறிக்கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஆட்டு இறைச்சி கிலோவிற்கு 100 ரூபாய் உயர்ந்தது.
Recommended Video
சேலம் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும் கோலாகலமாக கொண்டாடினர். தீபாவளிப் பண்டிகைக்கு அடுத்த நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சேலம் சூரமங்கலம், அன்னதானப்பட்டி, பழைய பேருந்து நிலையம், அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, அழகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறைச்சியை வாங்கிச் சென்றனர்.
தீபாவளிப் பண்டிகை என்பதால் இன்று ரூபாய் 700 முதல் 800 வரை ஆட்டுக்கறி விற்கப்பட்டது. கிலோவிற்கு 100 ரூபாய் விலை அதிகரித்து இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

இதுபோல் பிராய்லர் கோழி கிலோ 180 ரூபாய்க்கும், வளர்ப்பு நாட்டுக்கோழி கிலோ 350 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி கிலோ 550 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது, வியாபாரிகளின் மனதிற்கு நிறைவை தந்தது.
ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் வியாபாரம் இன்றி தவித்து வந்த இவர்களுக்கு தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட வியாபாரம் மனநிறைவை தந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications