மிஸ்டு கால், ஆபாச மெசேஜ், டார்ச்சர்.. சேலம் இளம் பெண் விரித்த வலையில்.. நடந்த பெரும் ட்விஸ்ட்!
சேலம்: மிஸ்டு கால் கொடுத்து, ஆபாச மேசேஜ் அனுப்பி இளம் பெண்ணை டார்ச்சர் செய்த இளைஞரை பிடிக்க விரித்த வலையில் சிக்கிய அப்பாவி இளைஞர் சிக்கினார். அந்நிலையயில் சிக்கியவரை உறவினர்கள் அடித்து உதைத்த நையப்புடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை போலீசார் தேடி வருகிறன்றனர். இந்த சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் அருகே பாலப்பட்டியை சேர்ந்த மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் வசிக்கிறார். மீனாவின் செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் மிஸ்டு கால் வந்திருக்கிறது.
அதே நபர், தொடர்ந்து மீனாவிற்கு மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். அதற்கு மீனா எந்த பதிலும் அளிக்காமல் கண்டுகொள்ளவில்லை.

நடந்தவற்றை கூறினார்
இந்நிலையில் அந்த நபர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி இருக்கிறார். மேலும் போனில் தொடர்ந்து பேசி ''டார்ச்சர்'' கொடுத்துள்ளார். இறுதியில் இரவு 11 மணியளவில் வீட்டில் இருந்து வந்து விடு என அழைத்துள்ளார். அவரது தொல்லை தாங்க முடியாததால் அந்த இளம்பெண் மீனா உறவினர்களிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் காத்திருப்பு
அவர்கள் யோசனைப்படி இரவு நீங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து விடுகிறேன் என்று இளம்பெண் தெரிவித்தார். அரியானூர் பிரிவு பகுதிக்கு வருமாறு அந்த நபர் கூறவே, கடந்த 28ம்தேதி இரவு அந்த பெண்ணின் உறவினர்கள் 10பேர் அந்த இடத்தில் ஆங்காங்கே பதுங்கி இருந்துள்ளனர். அப்போது டூவீலரில் ஒரு வாலிபர் வந்து, அரியானூர் பிரிவு சாலையில் நின்று செல்போனில் பேசியுள்ளார்.

தாக்குதல்
அங்கு பதுங்கியிருந்தவர்கள், அந்த இளைஞரை சுற்றிவளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர். அவரிடம் விசாரித்தபோதுதான் ஆள் மாறி தாக்கியது தெரியவந்தது. தாக்குதலுக்கு ஆளானவர் இளம்பிள்ளையை சேர்ந்த ரவிச்சந்திரன்(30) என்பது தெரியவந்தது. சேலம் கிச்சிபாளையத்தில் தாய் வீட்டுக்கு வந்திருந்த மனைவியை பார்த்துவிட்டு, சரியாக அரியானூர் பிரிவு சாலையில் வந்தபோது அவரது மனைவி செல்போனில் அழைக்கவே ஓரமாக டூவீலரை நிறுத்தி பேசி இருக்கிறார்

அப்பாவி மீது தாக்குதல்
இந்நிலையில் இளம் பெண் மீனா டார்ச்சர் கொடுத்தது அவர்தான் என தவறாக நினைத்து உறவினர்கள் தாக்கியது தெரியவந்தது. இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் அரசு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்படி கொண்டலாம்பட்டி போலீசார், அந்த இளம்பெண் மற்றும் உறவினர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

யார் அந்த நபர்
சினிமா பட பாணியில் ஆள் தெரியாமல் மாற்றிய தாக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்கடைசி வரை டார்ச்சர் செய்த நபர் யார் என்று தெரியவில்லை. போலீசாரின் விசாரணையில் உண்மையான நபர் சிக்குவார் என்று தெரிகிறது.
-
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications