ஆஹா.. இந்தா வந்துட்டாருல்ல.. லிம்கா புகழ் பத்மராஜன்.. 227வது முறையாக களமிறங்கிய தேர்தல் மன்னன்..!
தேர்தல் மன்னன் 227வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்
சேலம்: 227வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் தேர்தல் மன்னன் பத்மராஜன்.. வீரக்கல் புதூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்
மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன்.. 62 வயதாகிறது.. இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பேருந்து சக்கரங்களை புதுப்பிக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவருக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆசை.. அதற்காக எல்லா வகையான தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்
கடந்த 1986-ம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டதுதான் இவரது முதல் தேர்தல் அனுபவம்.. அதற்கு பிறகு, 1988ம் ஆண்டு முதல் இப்படி தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்.. எம்பி தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என ஒன்றைகூட விட்டுவைக்க மாட்டார்.. கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ஹைலைட்
30 வருடங்களுக்கு மேலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார் பத்மராஜன்... ஆனால் ஒருமுறை கூட வெற்றி பெற்றது கிடையாது.. இதில் ஹைலைட் என்னவென்றால், அகில இந்திய அளவில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை எதிர்த்தும் பத்மராஜன் தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ தொகுதியிலும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவை எதிர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியால் தொகுதியிலும் சுயேட்சையாக போட்டியிட்டதால், அகில இந்திய அளவில் ஃபேமஸ் ஆனார் பத்மராஜன்.

மோடி, ஜெயலலிதா
ஜெயலலிதா, மோடியையும் இவர் விட்டுவைக்கவில்லை.. தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியில் ஐந்தாவது முறையாக எம்பி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர் பத்மராஜன்.. நடிகர் சங்க தேர்தலையும் இவர் விட்டுவைக்கவில்லை.. அதிலும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தியவர்.. இவர் நாடக நடிகர் என்கிற அடிப்படையில் உறுப்பினர் அட்டை இருப்பதால் அந்த அடிப்படையில் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

கவுன்சிலர் பதவி
இதனால் இவருக்கு 'தேர்தல் மன்னன்' என்ற பட்டப்பெயரே உண்டு.. இந்நிலையில் இன்று தேர்தல் மன்னன் பத்மராஜன் 227-வது முறையாக வீரக்கல் பேரூராட்சி அலுவலகத்தில் 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வீரக்கல் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான ஜேம்ஸ் என்பவரிடம் அவர் வேட்பு மனுவை வழங்கினார். இது குறித்து பத்மராஜன் சொல்லும்போது, "எனக்கு வெற்றி தோல்வி எல்லாம் இலக்கு கிடையாது.. அதிக தேர்தலில் போட்டியிட்ட நபர் என்ற வரலாற்றை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே என்னுடைய ஒரே லட்சியம்" என்றார்..
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications