சேலத்தில் மேரி வீட்டில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அதுவும் சேலம் பஸ் ஸ்டாண்டு கிட்ட? ஆத்தூரில் யாரந்த 2 பேர்
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் ஸ்டாண்டிலேயே இப்படியொரு சம்பவம் இதுநாள் வரை நடந்து கொண்டிருந்ததா? என்று அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைதாகி உள்ளதுடன், அவர்களிடம் விசாரணையையும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.. !!
தர்மபுரி மாவட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து சொல்வதாகவும், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளை அழைத்து சென்று, வீட்டில் வைத்து ஸ்கேன் செய்து, பாலினத்தை கண்டறிந்து கூறுவதாகவும், தர்மபுரி மாவட்ட இணை இயக்குனர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தர்மபுரி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையில், மருத்துவ குழுவினர் தர்மபுரியிலிருந்து இருந்து கள்ளக்குறிச்சிக்கு விரைந்து சென்றனர்..
அதிரடி சோதனை: அங்கு குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனையை நடத்தியதுடன், ரஞ்சித் என்பவரையும் இது தொடர்பாக கைது செய்தனர். பிறகு ரஞ்சித்திடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, சேலம் மாவட்டம், ஆத்தூர், பஸ் ஸ்டாண்ட் அருகில், மேரி என்பவர் வீட்டில் வைத்து, கர்ப்பிணிக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறியக்கூடிய ஸ்கேன் எடுக்கப்படுவதாக ரஞ்சித் தன்னுடைய வாக்குமூலத்தில் கூறினார்.
இதனால், ஆத்தூர் பகுதியில், மேற்கு மாதாகோவில் தெருவில் சத்யா என்பவரது வீட்டில், அக்கிசெட்டிபாளையத்தை சேர்ந்த கருணாநிதி மகன் சௌந்தர்ராஜன், கருவிலுள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிய ஸ்கேன் மெஷின் வைத்திருந்ததையும், கருக்கலைப்புக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வைத்திருந்ததையும், மருத்துவ குழுவினர் கண்டறிந்தனர்.
ஸ்கேன்: சௌந்தர்ராஜனிடம் நடைபெற்ற விசாரணையில், ஆத்தூர் கோட்டை பகுதியை சேர்ந்த முனியன் மகன் வெங்கட்ராமன் (எ) வெங்கடேஷ் என்பவர் மூலம் கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து ஸ்கேன் செய்ததும் தெரியவந்தது.
அதாவது, கர்ப்பிணி ஒருவருக்கு அபார்ஷன் செய்ய வேண்டுமானால், அதற்கு 12 ஆயிரம் ரூபாயை இவர்கள் வசூலித்து வந்துள்ளார்கள்.. இறுதியில், மேற்கண்ட சம்பவங்கள் சம்பந்தமாக ஆத்தூர் டவுன் போலீசுக்கு தர்மபுரி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சாந்தி தகவல் தெரிவித்ததையடுத்து, சௌந்தரராஜன்(48), வெங்கடேஷ்(45) ஆகிய இருவரையும் டவுன் போலீசார் கைது செய்துள்ளனர்..
பரபரப்பு: அவர்களிடமிருந்து ஸ்கேன் மிஷின்கள், மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், கைதான 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆத்தூர் பஸ் ஸ்டாண்டிலேயே இப்படியொரு அபார்ஷன்கள் இத்தனை காலமும் நடந்து வந்துள்ளது, மிகப்பெரிய பரபரப்பை சேலத்தில் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications