கொரோனாவை ஒழிக்க நான் ஒரு ஆள் போதும்.. சேலம் ரேடியோ டவர் மீது ஏறி இளைஞர் கோஷம்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: கோவிட் நோய்த் தொற்றை தனி ஒரு மனிதனாக இருந்து ஒழிப்பேன் என சேலம் வானொலி டவர் மீது ஏறிய இளைஞர் ஒருவர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று உச்சத்தில் இருந்த போதும் தற்போது குறைந்துள்ள போதும் அதை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Salem youth says that he will destroy Corona

இந்த நோய் தொற்றுக்கு முடிவு கட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என ரஜினி செந்தில் என்ற வாலிபர் வானொலி கோபுரம் மீது ஏறி கோஷம் எழுப்பியதால் 4ரோடு சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த தகவல் செவ்வாய்பேட்டை காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக காவல் துறையினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து ரஜினி செந்தில் இடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அவரை வானொலி கோபுரத்தில் இருந்து கீழே இறக்கி அவரை காவல்துறையினர் விசாரணைக்காக செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

மேலும் ஒரே நாளில் நோய்த்தொற்றை ஒழிக்க செய்து விடுவேன் என்று கோஷத்தால் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் வியப்பிலும் குழப்பத்திலும் நின்று வேடிக்கை பார்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+