மலேசிய நஜிப் ரசாக்கின் ஊழலில் கூட்டாளியாக செயல்பட்ட இந்திய தொழிலதிபருக்கு சிங்கப்பூர் அதிரடி தடை!
சிங்கப்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கூட்டாளியாக செயல்பட்ட இந்திய தொழிலதிபரான சுவிஸ் தனியார் வங்கியின்
முன்னாள் மூத்த அதிகாரியும் இந்தியருமான ராஜ் ஶ்ரீராமுக்கு சிங்கப்பூர் அரசு 10 ஆண்டுகால தடை விதித்துள்ளது.
மலேசிய பிரதமராக இருந்த நஜிப் ரசாக், நாட்டின் வளர்ச்சிக்கா 1எம்டிபி திட்டத்தை தொடங்கினார். இந்த 1 எம்டிபி நிறுவனமானது வெளிநாடுகளின் நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற்றது.

1 எம்டிபி திட்டத்தின் பெயரிலான பெருமளவு நிதி நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இப்படி ஊழல் செய்த நஜிப் ரசாக், சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் அம்பலமானது. இது மலேசியாவில் பெரும் புயலை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நஜிப் ரசாக்கின் வங்கி கணக்கு முறைகேடுகளை கண்டும் காணாமல் இருந்ததாக சிங்கப்பூரை சேர்ந்த இந்திய தொழிலதிபரான ராஜ் ஶ்ரீராமும் சிக்கினார். சுவிஸ் நாட்டின் தனியார் வங்கியான பி.எஸ்.ஐ.-ன் சிங்கப்பூர் கிளையின் மூத்த அதிகாரியாக இருந்தவர் ராஜ் ஶ்ரீராம்.
நஜிப் ரசாக்கின் கூட்டாளியாக இருந்து ஊழல் முறைகேடுகளில் உடந்தையாக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக ராஜ் ஶ்ரீராம் மீது விசாரணைகள் நடைபெற்றன. இந்த விசாரணையின் முடிவில் ராஜ் ஶ்ரீராமுக்கு சிங்கப்பூர் அரசு 10 ஆண்டுகாலம் தடை விதித்துள்ளது. நஜிப் ரசாக்கின் வங்கி பரிவர்த்தனை முறைகேடுகள் தொடர்பாக முறையான அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நிதிசார் நடவடிக்கைகளில் ராஜ் ஶ்ரீராம் ஈடுபடவும் சிங்கப்பூர் அரசு தடை விதித்திருந்தது. இதன் அடுத்த கட்டமாக 10 ஆண்டுகால தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications