தமிழன் தான் எந்நாளும்..வியக்க வைக்கும் கீழடி! தாழிக்குள் நெல்லும் பல்லும்! ஆய்வாளர்கள் ஆச்சர்யம்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியின்போது, கொந்தகை தளத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில், முதல் முறையாக, தாழியினுள் நெல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில், கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கொந்தகையில் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்பட்டு, அங்கு நடைபெற்ற அகழாய்வில், இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கொந்தகையில் அகழாய்வு
தற்போது நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் முழுமையாக சேதமடையாமல் ஒருசில தாழிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் உள்ள பொருட்களை மட்டும் மரபணு சோதனை செய்ய தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் தாழி திறக்கப்பட்டு, அதில் உள்ள எலும்புகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது.

123-வது தாழி திறப்பு
இந்நிலையில், தமிழக தொல்லியல்துறை ஆணையாளர் சிவானந்தம், இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய்குமார், காவ்யா உள்ளிட்டோர், நேற்றிரவு, 123-வது தாழியை திறந்தனர். நான்கரை அடி உயரமுள்ள தாழியினுள் சிதலமடைந்த மண்டை ஓடும், கை, கால் எலும்புகளும் கிடைத்துள்ளன. இதுவரை தாழிகளினுள் மண்டை ஓடு, சுடுமண் பானைகள், இரும்பு ஆயுதம் உள்ளிட்டவை மட்டும் கண்டறியப்பட்டன.

தாழியினுள் நெல் மணிகள்
தற்போது முதல்முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் மணிகள் கண்டறியப்பட்டுள்ளன. இறுகிப் போன நிலையில் கிடைத்துள்ள இந்த நெல்மணிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதேபோல், முதல் முறையாக தாழிகளினுள் சுடுமண் பாத்திரங்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தாழிகள்
இதுகுறித்து தொல்லியல் துறையினர் தெரிவிக்கையில், இந்த தாழிகள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கக்கூடும். இந்த தாழிகள், ஒரு அந்தஸ்தாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். தாழியினுள் உள்ள பொருட்களை வைத்து இறந்தவர்களின் மதிப்பையும் அறிய முடிகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள தாழியினுள் 6 சுடுமண் பாத்திரங்கள் உள்ளிட்ட 19 பொருட்கள் கிடைத்துள்ளன.

மதிப்பு மிக்கவர்
தாழியினுள் அதிகளவு பாத்திரங்கள் இருப்பதாலும், நெல் மணிகள் இருப்பதாலும் இவர் செல்வந்தவராகவோ அல்லது மதிப்புமிக்கவராகவோ இருந்திருக்கக்கூடும். மேலும், முகத்தின் கீழ்தாடை பற்கள் கிடைத்துள்ளன. மொத்தம் 16 பற்கள் உள்ளன. பற்கள் அனைத்தும் வலுவானதாக இருந்திருக்கும். தாழியினுள் புதைக்கப்பட்டவர்கள் நல்ல திடகாத்திரமான, வலுவான உடலமைப்பை கொண்டவராக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இந்த மாதத்துடன் பணிகள் நிறைவு பெற உள்ளதை அடுத்து, தாழிகள் அனைத்தையும் திறந்து ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் திட்டமிட்டு, அதற்கான பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications