அய்யோ போச்சே.. வைரம் பதித்த பேனாவை தொலைத்த சிவகங்கை வேட்பாளர் தேவநாதன் யாதவ்! என்ன நடந்தது?
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது வைரம் பதித்த பேனாவை அவர் தொலைத்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதி திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். தற்போது இவர் சிவகங்கையின் சிட்டிங் எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் களமிறங்கி உள்ளார்.
‛பிராமணர்கள் இல்லை’..தமிழக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளில் எந்த ஜாதிக்கு அதிக வேட்பாளர்கள் தெரியுமா?
இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதி இந்திய கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் நிறுவன தலைவரான தேவநாதன் யாதவ் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். சிவகங்கை தொகுதியில் யாதவர் கணிசமாக வசிக்கும் நிலையில் தேவநாதன் யாதவ் வேட்பாளராகி உள்ளார்.
சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரமா? காங்கிரசிலேயே புகையுதே! வெல்வாரா சிதம்பரத்தின் வாரிசு?
இந்நிலையில் தான் இன்று சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் தேவநாதன் யாதவ் பங்கேற்றார். அப்போது அவர் தனது சட்டைப்பையில் வைரம் பதித்த பேனா வைத்திருந்துள்ளார். எதிர்பாராத விதமாக அந்த பேனா கீழே விழுந்த நிலையில் அதனை தேவநாதன் யாதவ் கவனிக்கவில்லை. இதனால் வைரம் பதித்த பேனா தொலைந்துபோனது. இதுபற்றி மைக்கில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் வைரம் பதிக்கப்பட்ட பேனா கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications