சினிமா பாணியில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. சிவகங்கை அருகே பெரும் பரபரப்பு!
Recommended Video

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே மாணவன் ஒருவரை பஸ்ஸை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டியது ஒரு கும்பல். அந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆண்டிசூரணி விளக்கு பகுதிக்கு பேருந்து வந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்து, அரிவாளுடன் ஏறினர்.

அவர்கள் பேருந்தில் பயணித்த பயணிகளை மிரட்டி, சூசையப்பர்பட்டிணத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் சிவக்குமார் என்பவரை மட்டும் தனியாக பிரித்து வலது கையில், வெட்டினர். இதனால் பேருந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்தக் கும்பல் தப்பிச் சென்று விட்டது.
சம்பவம் அறிந்து வந்த, காவல்துறையினர், படுகாயமடைந்த மாணவனை மீட்டு காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காளையார்கோவில் காவல்துறையினர், மாணவனை வெட்டிய கும்பல் யார், எதற்காக இந்த தாக்குதல், காதலா அல்லது முன்விரோதமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications