விலகிய சுப்மன் கில்.. தமிழக வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. சான்ஸை மிஸ் செய்யாதீங்க சாய் சுதர்சன்!
கவுகாத்தி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் விலகியுள்ள நிலையில், அவரது இடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சாய் சுதர்சன் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை கவுகாத்தி மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வென்றதால், இந்தப் போட்டியில் கட்டாயமாக வெல்ல வேண்டிய சூழல் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியின் போதே கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக சுப்மன் கில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின் இந்திய அணி வீரர்களுடன் கவுகாத்தி வந்த சுப்மன் கில், இன்று ஃபிட்னஸ் பரிசோதனையில் பங்கேற்றார். அதில் சுப்மன் கில் முழு ஃபிட்னஸ் உடன் இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார்.
மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ள சுப்மன் கில், மருத்துவமனை சிகிச்சையை முடித்து ஃபிட்னஸ் உடன் தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்த உள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் 38வது கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
அதேபோல் சுப்மன் கில்லின் இடத்தில் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே நிதிஷ் குமார் ரெட்டி அணிக்குள் கொண்டு வரப்பட்டாலும், சாய் சுதர்சன் விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
ஆனால் சாய் சுதர்சன் இணைக்கப்பட்டால், ஒரேயொரு 2 வலது கை பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்திய அணியில் இருப்பார்கள். கேஎல் ராகுல், துருவ் ஜுரெல் ஆகியோரை தவிர்த்து இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகளவில் இருக்கின்றனர். இதனால் சாய் சுதர்சன் அல்லது நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications