கறுப்பு பட்டை.. 1 நிமிட அஞ்சலி! டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா ஒற்றுமை -ஏன் தெரியுமா?
லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஜெர்சியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருவது ஏன்? விரிவாக பார்ப்போம்.
2 வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்து உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானா, சடேஸ்வர் புஜாரா, முஹம்மது ஷமி, முஹம்மது சிராஜ், உமேஷ் யாதவ், ஷுப்மன் கில், ஸ்ரீகர் பரத், சர்துல் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். போட்டியின் சூழலுக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்று கூறி உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளர் அஸ்வினை கேப்டன் ரோகித் சர்மா சேர்க்கவில்லை.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரான் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்சல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலாண்ட் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இரு நாடுகளின் தேசிய கீதம் முழங்கிய பிறகு இந்த போட்டி தொடங்கப்பட்டது.
தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது இந்தியா ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அணிவகுத்து நிற்கும்போது இரு அணி வீரர்களின் கைகளிலிலும் கறுப்பு பட்டை இருந்ததை பார்க்க முடிந்தது. பலருக்கும் ஏன் இரு அணி வீரர்களும் கறுப்பு பட்டை அணிந்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கும்.
ஆம், கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் 288 உயிர்களை பறித்து 1000 க்கும் அதிகமானோரை காயப்படுத்திய ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரு நாட்டு வீரர்களும் கறுப்பு பட்டை அணிந்தனர். அத்துடன் இரு அணியினரும் ஒடிசா ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications