Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு வழியாக ரியான் பராக் கனவு நடந்துருச்சு.. ராஜஸ்தான் கேப்டனாக நியமனம்.. பின்னணியில் உறவினர்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் ரியான் பராக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் பெரிதாக சாதிக்காத ரியான் பராக், திடீரென ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதன் பின்னணி தொடர்பாக முழுமையாக பார்க்கலாம்.

2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி 9வது இடத்தில் நிறைவு செய்தது. அதன்பின் ராஜஸ்தான் அணியில் ஏராளமான சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இணைந்தார்.

IPL 2026

மும்பை, டெல்லி உள்ளிட்ட அணிகளில் இருந்து அழைப்பு வந்த போதும், அவர் ராஜஸ்தான் அணியையே தேர்வு செய்தார். ஆனால் ராஜஸ்தான் அணியுடன் இணைந்த ஒரே ஆண்டில் ராகுல் டிராவிட் பதவி விலகினார். அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேட் மூலமாக வாங்கியது.

அதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை சிஎஸ்கே அணி விட்டுக் கொடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கான போட்டியில் ஜடேஜா இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணி இளம் வீரரான ரியான் பராக்கை கேப்டனாக நியமனம் செய்திருக்கிறது.

இதற்கு ராஜஸ்தான் அணி உரிமையாளரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரியான் பராக் என்பதே காரணமாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ரஞ்சித் பர்தாகூர் இருந்து வருகிறார். ராயஸ் ஸ்போர்ட் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் சேர்மேனாக இருப்பவர் ரஞ்சித் பர்தாகூர்.

கவுகாத்தியை சேர்ந்த தொழில் அதிபரான ரஞ்சித் பர்தாகூர், நேரு குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் ரியான் பராக்கிற்கு மாமா முறை உறவினர். ரியான் பராக்கை ராஜஸ்தான் அணியை கேப்டனாக முன்னிலைப்படுத்த ராகுல் டிராவிட்டுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாகவே ரியான் பராக்கை 17 வயதிலேயே ராஜஸ்தான் அணிக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் ரியான் பராக்கிற்கு கிடைக்கும் முக்கியத்துவம் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு அளிப்பதில்லை. கடந்த சீசனில் சஞ்சு சாம்சனை வேண்டுமென்றே சில போட்டிகளில் பெஞ்ச் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+