வைபவ் சூர்யவன்ஷிக்கு கொடுத்த மரியாதை.. சீனியராக உயர்ந்துவிட்ட விராட் கோலி.. என்ன நடந்தது?
கவுகாத்தி: ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த கேட்சை பிடித்த விராட் கோலி, எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் நடந்து சென்ற வீடியோ ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. இதன் மூலமாக ஜூனியருக்கான மரியாதையை விராட் கோலி கொடுத்துள்ளதாகவும், சிறுவனுக்கு எதிராக எந்தவித ஆக்ரோஷ கொண்டாட்டமும் செய்ய கூடாது என்ற தெளிவுடன் விராட் கோலி இருந்ததாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. ஆர்சிபி அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை வெறும் 18 ஓவர்களில் சேஸிங் செய்து ராஜஸ்தான் அணி தரமான சம்பவம் செய்துள்ளது. ராஜஸ்தான் அணியின் இந்த வெற்றிக்கு வைபவ் சூர்யவன்ஷி காரணமாக அமைந்துள்ளார்.

26 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 78 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, ஆர்சிபி அணியிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டார் என்றே சொல்லலாம். 8 ஓவர்கள் வரை களத்தில் இருந்த வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை 129 ரன்களுக்கு உயர்த்திவிட்டு சென்றார். சிறப்பாக ஆடிய அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது க்ருணால் பாண்டியா பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்து விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த கேட்சை பிடித்த விராட் கோலி, கொஞ்சம் ஆக்ரோஷமாக எழுந்தாலும் உடனடியாக நிதானமாகினார். ஏனென்றால் 15 வயது சிறுவனுக்கு எதிராக எந்தவித ஆக்ரோஷ கொண்டாட்டத்தையும் செய்யக் கூடாது என்ற தெளிவுடன் விராட் கோலி இருந்தார்.
இதனால் கேட்ச் பிடித்த பின் நிதானமாக நடந்து சென்றார். அதேபோல் ஜூனியருக்கான மரியாதையையும் விராட் கோலி அளித்ததாக பார்க்கப்படுகிறது. வழக்கமாக விராட் கோலி எந்த கேட்ச் பிடித்தாலும், எங்கு நின்றிருந்தாலும் பிட்ச்சை நோக்கி ஓடி வருவார். அது வைபவ் சூர்யவன்ஷியின் கேட்சை பிடித்த போது மிஸ்ஸிங்.
இதனால் சிறுவனின் ஆட்டத்தை பாராட்டும் வகையில் விராட் கோலியின் செயல்பாடுகள் இருந்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரின் ஜாம்பவான் அணிகளான சிஎஸ்கே, மும்பை மற்றும் ஆர்சிபி ஆகிய 3 அணிகளின் ரசிகர்களையும் ஒரே நேரத்தில் வைபவ் சூர்யவன்ஷி டார்ச்சர் செய்வதாகவும் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications