உறவுகளுக்கு அஞ்சலி.. விஜய் கரூர் பிரசாரத்தில் 40 பேர் பலியான சோகம்.. இலங்கை தமிழ் அரசுக்கட்சி வேதனை
கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்தவரும், நாடாளுமன்றம் குழு தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்தும் - தீக்குளித்தும் உயிர்க்கொடையளித்த தமிழக உறவுகளின் அளப்பெரும் தியாகங்களை நெஞ்சேந்தியவர்களாக, இந்தப் பெருவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது பிரார்த்தனைகள் என்று தெரிவித்துள்ளார்.

கரூரில் நேற்று இரவு நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள் 17 பேர், குழந்தைகள் 10 பேர் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்தவரும், பாராளுமன்ற எம்.பியும், பாராளுமன்ற குழு தலைவருமான சிவஞானம் சிறீதரன் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் கரூர் மாவட்டம் - வேலுச்சாமிபுரத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பேரணியில், கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த மனவேதனைக்குரியது.
எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தால் தாய்த்தமிழகத்தைச் சேர்ந்த எமது தொப்புள்கொடி உறவுகளான அப்பாவிப் பொதுமக்கள் 39 பேர் அநியாயமாக உயிரிழந்தமை எமக்கும், எமது மக்களுக்கும் மிகுந்த மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. நெருக்கடியும், வேதனையும் மிக்க இந்த துயர்மிகுந்த சூழலால் பாதிப்புற்றிருக்கும் எல்லாத்தரப்பினருடனும் உணர்வுரீதியாக நாமும் கரம்கோர்த்துக்கொள்கிறோம்.
மிகக்குறிப்பாக, புதுமுக அரசியல் கட்சியாக தனது புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினரும், நண்பர் விஜய் அவர்களினது அரசியல் பயணம், துயரமும் - வேதனையும் மிக்க இந்த உயிர்த்தியாகங்களின் மீது, உறுதி மிக்கதும் மக்கள் மயப்பட்டதுமாக வலுவாக கட்டமைக்கப்படட்டும்.
இழப்பின் வலிகளையும் - ரணங்களையும் உணர்ந்தவர்களாக, ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்தும் - தீக்குளித்தும் உயிர்க்கொடையளித்த தமிழக உறவுகளின் அளப்பெரும் தியாகங்களை நெஞ்சேந்தியவர்களாக, இந்தப் பெருவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலிகளும், அவர்களது குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காக எமது பிரார்த்தனைகளும்" என்று கூறியுள்ளார்.
-
லவ்வரை மிஸ் பண்ணுகிறேன்.. காதல் இல்லாத வாழ்க்கை! ஓபனாக திரிஷா போஸ்ட்! இப்படி சொல்லிட்டாங்களே! -
இத்தனை வருஷமாக காத்திருந்து நேரம் பார்த்து அவதூறு செய்றாங்க.. மனைவி சங்கீதாவை சூசகமாக சாடிய விஜய்! -
ஜனநாயகன் பற்றிய கேள்வி, ரஜினி கொடுத்த ரியாக்சன்! கடைசியில் சொன்ன தத்துவம் தான் ஹைலைட் -
விஜய் ஒன்னும் சும்மா சினிமாவை விட்டு வரல.. 20,000 கோடிக்கு ஆசைப்படுகிறார்! ஏமாற்றுக்காரர்.. ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம் -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
Vijay: பெரம்பூரில் "5 ஜோசப் விஜய்" போட்டி! அப்படியே ஓபிஎஸ்ஸுக்கு நடந்தது மாதிரியே! -
விஜய் அறிவித்த 2 பேர் வேட்பு மனுவே தாக்கல் பண்ணல.. கடைசி நாளில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
விஜய்க்கு பெரிய ஷாக்.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் மாயம்.. வேட்பு மனுவும் நிராகரிப்பு -
ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்.. நெல்லை பரப்புரைக்கு 51 நிபந்தனைகளுடன் அனுமதி - செங்கோட்டையன் -
வில்லிவாக்கத்திலிருந்து.. தி.நகருக்கு 1 மணி நேரத்தில் போக முடியாதாம்! பரப்புரையை ரத்து செய்த விஜய்! -
தொடர்ந்து சொதப்பும் விஜய்.. அடுத்தடுத்து பரப்புரை ரத்து! காரணங்களை பாருங்க! -
1 மணி நேரம் போதாதா? இன்னும் 15 நாள்தான் இருக்கு.. விஜய்யும் தள்ளாடும் தமிழக வெற்றிக் கழகமும்!












Click it and Unblock the Notifications