கூட்டுறவு வங்கி நகைக்கடனை கட்டிய கஸ்டமர்.. குறுகுறுன்னு பார்த்த காஞ்சிபுரம் லட்சுமி.. செம திருப்பம்
சென்னை: காஞ்சீபுரம் கூட்டுறவு வங்கியில் ஒருவர் நம்பிக்கையுடன் நகைக்கடனை செலுத்தி உள்ளார்.. அதற்கு பிறகு திடீரென என்னாச்சு தெரியுமா? அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அம்பலமான உண்மை என்ன? யாரிந்த லட்சுமி? அவர் மீது துறைவாரியாக எடுத்த நடவடிக்கை என்ன? இவைகளைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் ஆகச்சிறந்த அவசர கால புகலிடமாக விளங்குவது கூட்டுறவு வங்கிகள் தான். தனியார் நிதி நிறுவனங்களின் அநியாய வட்டிக்கு பயந்து, தங்களுடைய வாழ்வாதாரமாக விளங்கும் தங்க நகைகளை மக்கள் நம்பிக்கையோடு ஒப்படைக்கும் ஒரே இடம் இந்த கூட்டுறவு சங்கங்கள் தான்.

விவசாயத்திற்கும், அவசர குடும்ப தேவைகளுக்கும் மிகக் குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்கும் இந்த பொதுத்துறை அமைப்புகள், எளிய மக்களின் பொருளாதார முதுகெலும்பாகவே திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
கூட்டுறவு வங்கி நகைக்கடன்
தங்களின் உழைப்பில் சேர்த்த நகைகள் இங்கே பாதுகாப்பாக இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் கிராமப்புற மக்கள் தங்களின் சேமிப்பை இங்கு அடகு வைக்கிறார்கள். ஆனால், அந்த அசைக்க முடியாத நம்பிக்கையிலேயே வெடியை வைப்பது போல ஒரு அதிர்ச்சி சம்பவம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காஞ்சீபுரம் மண்டலம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட களியாம்பூண்டி கிராமத்தில் ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுற்றியுள்ள கிராம மக்கள் பலரும் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் யோக விஷ்ணு , இந்த சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சில ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது அதிரடி உத்தரவின் பேரில், கூட்டுறவு சார்பதிவாளர் சாந்தி தலைமையிலான ஆய்வுக்குழுவினர் களியாம்பூண்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்குள் திடீரென நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்..
நகைக்கடன் பணம் அபேஸ்
அதிகாரிகள் கூட்டமாக உள்ளே நுழைந்ததை கண்டதும் அங்கிருந்த ஊழியர்களுக்கு லேசாக உதறல் எடுக்கத் தொடங்கியுள்ளது. ஆய்வுக்குழுவினர் அங்குள்ள கணக்கு வழக்குகளையும், வரவு செலவு பதிவேடுகளையும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தனர்.
அப்போதுதான் அந்த இடி போன்ற உண்மை வெளிவந்தது. அந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர் ஒருவர், தான் வாங்கிய நகைக்கடனை நேர்மையாக திருப்பிச் செலுத்துவதற்காக கூட்டுறவு சங்கத்தில் ரொக்கமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 419 செலுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பெரும் தொகை சங்கத்தின் அதிகாரப்பூர்வ கணக்கில் வரவு வைக்கப்படாமல் அப்படியே மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கூட்டுறவுத்துறை அதிர்ச்சி
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அங்கிருந்த ஊழியர்களிடம் தங்களது பாணியில் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர்... விசாரணையின் முடிவில் பல உண்மைகள் அம்பலமாகி கூட்டுறவுத்துறை வட்டாரத்தையே உலுக்கியுள்ளது.
அந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் பொறுப்பு செயலாளராகவும், எழுத்தராகவும் பணியாற்றி வந்த லட்சுமி என்ற பெண்மணிதான் இந்த விபரீத வேலையைச் செய்துள்ளார் என்பது அம்பலமானது. லட்சுமி தனது சுயலாபத்திற்காக, சங்கத்தின் கணக்கில் காட்டப்பட வேண்டிய ரொக்கக் கையிருப்பை திட்டமிட்டு குறைத்துக் காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்ல, கஸ்டமர் நம்பிக்கையோடு கொண்டு வந்து கட்டிய ரூ.1 லட்சத்து 80-ஆயிரத்து 149 பணத்தை சங்க கணக்கில் ஏற்றாமல், தனது சொந்த தேவைக்காக அப்பட்டமாக கையாடல் செய்துள்ளார் என்பதும் விசாரணையில் வெட்டவெளிச்சமாகிப் போனது.
கையாடல் - முறைகேடு
மக்களின் நகைக் கடன் பணத்தில் கைவைத்து, இத்தனை பெரிய முறைகேட்டில் ஈடுபட்ட எழுத்தர் லட்சுமி மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் உடனடியாக பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, சங்க செயலாட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, களியாம்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எழுத்தர் லட்சுமியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஏழை மக்களின் நம்பிக்கையோடு விளையாடிய கூட்டுறவு சங்க பெண் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்த சம்பவம், காஞ்சீபுரம் மற்றும் உத்திரமேரூர் பகுதி மக்களிடையே இப்போது பயங்கரமான அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது...!!!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications