வெளிநாட்டு ஈழத் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: வெளிநாடுகளில் செயல்படும் ஈழத் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டமைப்பதாக குற்றம்சாட்டி வெளிநாட்டில் செயல்படும் பல்வேறு இலங்கை தமிழ் அமைப்புகளுக்கு முந்தைய ராஜபக்சே அரசு தடைவிதித்தது.
மேலும் 400 தனிநபர்களை தீவிரவாதிகளாக பட்டியலிட்டு அவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படலாம்.
இவ்வாறு மங்கள சரமவீரா கூறினார்.












Click it and Unblock the Notifications