இலங்கையில் இந்தியாவின் "இந்தி" மையத்துக்கு போட்டியாக "உருது" மொழி மையம் அமைத்த பாக்.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் பல ஆண்டுகாலம் இந்திய தூதரகம் மூலம் இந்தி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குப் போட்டியாக பாகிஸ்தான் தூதரகமும் "உருது" மொழி பயிற்சி வகுப்புகளுக்கான மையத்தை தற்போது தொடங்கியுள்ளன.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்தி மொழி வகுப்புகளை நடத்தி வருகிறது. கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் இப்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திலும் கூட இதற்கான முயற்சிகளை இந்திய தூதரகம் மேற்கொண்டது விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் இந்தியாவின் இந்தி பயிற்சி மையங்களுக்குப் போட்டியாக பாகிஸ்தான் உருது மொழி பயிற்சி மையத்தையும் தொடங்கியுள்ளது.
சிங்களவர்கள் இந்தி கற்றுக் கொள்ளும் போது ஏன் உருது மொழி கற்கக் கூடாது என்ற பொறாமையில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் இந்நடவடிக்கைகள் கடும் அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications