மோடி, ஜெ.க்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டம்! ஜெ. உருவபொம்மை எரிப்பு!!
கொழும்பு: ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இன்று கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .இந்த போராட்டத்தின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு டெல்லி வந்திருந்த ராஜபக்சேவிடம், மீனவர்கள் விவகாரம்; ஈழத் தமிழர் பிரச்சனையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதை ராஜபக்சே எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது.
இதேபோல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த முதல்வர் ஜெயலலிதா, இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தது. இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும்; தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதனால் தொடர்ந்து இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் இலங்கை அமைச்சர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை விவகாரங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிடக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக ராஜபக்சே ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜாதிக சன்விதானா ஏகமுதுவா என்ற அமைப்பின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன் முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையையும் எரித்து ராஜபக்சே ஆதரவாளர்கள் வெறியாட்டம் போட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications