இலங்கை வட மாகாணத்தைப் பார்வையிட மன்மோகன்சிங்குக்கு முதல்வர் விக்னேஷ்வரன் கடிதம்

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், நீண்ட காலத்துக்குப் பின்னர் நடைபெற்ற வடக்கு மாகா சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்று மாகாணசபையைத் தன்வசப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாகாண சபையின் முதல் அமர்வு நடைபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நிலைமையை உருவாக்கியதில் இந்தியாவின் பெரும் பங்குண்டு என்பதை நாம் மறக்கமாட்டோம்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்தது. தங்கள் அழுத்தங்களின் பின்னணியில் தான் வடக்கு மாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்தியது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும், வடக்கு மாகாண மக்கள் சார்பிலும் தங்களுக்கு நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து என்னைச் சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், டெல்லிக்கு என்னை வருமாறு அழைப்பு விடுத்தார். மிக்க நன்றி. நான் விரைவில் டெல்லி வந்து தங்களைச் சந்திப்பேன்.
இந்தியப் பிரதமர் என்ற வகையில் தாங்களும் வடக்கு மாகாணத்துக்கு வந்து இங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடுமாறு வேண்டிக் கொள்கின்றேன். இதை எமது வடக்கு மக்களும் விரும்புகின்றார்கள்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு பற்றி இக்கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications